அண்ணன் தானே என வீட்டிற்கு சென்ற சிறுமியை சீரழித்த மாணவன்

0
303

அண்ணன் தானே என வீட்டிற்கு சென்ற சிறுமியை சீரழித்த மாணவன்

அண்ணன் என நினைத்து தன்னுடன் வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஐடிஐ மாணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள காரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவா.17 வயதாகும் இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காரப்பட்டு பகுதியில் இவர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான 9 வயது சிறுமி அந்த வழியாக வந்திருக்கிறார். ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த இந்த சிவா சிறுமியிடம் லேசாக பேச்சு கொடுத்துள்ளார். அப்படியே பேசிக் கொண்டே சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார். அவரை அண்ணன் போல நினைத்த சிறுமியும் அவருடன் சென்றிருக்கிறார். இதனையடுத்து அவரது வீட்டுக்கு அழைத்து சென்ற அந்த சிறுமியை கட்டாயபடுத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் இந்த மாணவர்.

இதனையடுத்து அங்கு நடந்த இந்த சம்பவத்தை வேறு யாரிடமும் கூறக் கூடாது என அந்த சிறுமியை சிவா மிரட்டி அனுப்பியுள்ளர். அவர் மிரட்டலுக்கு பயந்த சிறுமி தனக்கு நடந்த இந்த கொடுமையை வேறு யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டு வழக்கம் போலவே இருந்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி வயிறு வலிப்பதாக அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அடிக்கடி வயிறு வலிப்பதாக கூறிய அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

இதனையடுத்து சிறுமியை மருத்துவ சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இந்த சிறுமியை பரிசோதித்து பார்த்தனர். அந்த சோதனையின் போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் விசாரிக்கையில் நடந்த நிகழ்வுகளை சிறுமியும் கூறியுள்ளார்.பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிறுமியிடம் விசாரித்தனர்.

அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவன் சிவாவை கைது செய்தனர்.அண்ணன் என நினைத்து வீட்டிற்கு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleகையைக் கடிக்கும் தர்பார் வசூல் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி !
Next articleபெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here