பிளஸ் 2 தேர்வெழுதிய சிறைக் கைதிகள் 50 பேர் வெற்றிக்கனியை பறித்தனர்.!!

0
181

12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. அதன் முடிவுகள் இன்று காலை இணையத்தில் வெளியாகியது. மேலும் மாணவர்களின் மொபைல் எண்ணிற்கு அவரவர் மதிப்பெண் குறித்த விவரம் குறுஞ்செயதியாக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த பொதுத்தேர்வில் 97.12% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தையும், 96.99% தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தில் ஈரோடு மாவட்டமும், 96.39% தேர்ச்சியில் கோவை மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் இந்த தேர்வு எழுதிய பள்ளிகளில் 2,120 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வினை சிறையிலுள்ள 62 கைதிகள் எழுதினர். இதில் 50 சிறைக்கைதிகள் தேர்வில் வெற்றி பெற்றது வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. இச்செய்தி சிறை கைதிகளுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇன்று (ஜூலை 16) பெட்ரோல் மற்றும் டீசல் விலை?
Next articleகிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலி வீட்டிலேயே தனிமை! எதிர்பாராத நிகழ்வு!