நட்சத்திர மீனுடன் செல்பி!! அதன்பின்னர் சுற்றுலாவாசிகளுக்கு நேர்ந்த கதி!!

0
78
Selfie with starfish!! And then what happened to the tourists!!
Selfie with starfish!! And then what happened to the tourists!!

நட்சத்திர மீனுடன் செல்பி!! அதன்பின்னர் சுற்றுலாவாசிகளுக்கு நேர்ந்த கதி!! 

மீனுடன் செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள் அதை சமூக ஊடகத்தில் பகிர்ந்ததால் விபரீதத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சம்பவம் தாய்லாந்து நாட்டில் நிகழ்ந்துள்ளது.

அந்தநாடு சுற்றுலா தளங்களுக்கு புகழ் பெற்றதால் அங்கு ஏராளமான சுற்றுலாவாசிகள் வருவது வழக்கம்.இதனால் அந்த நாடு இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது.

அந்த நாட்டில் உள்ள கோ ரச்சா யாய் மற்றும் கோ ரச்சா நொய் என்ற  இரண்டு  தீவுகள் கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழும் பகுதிகளாகும். அங்கு உள்ள பவளப் பாறைகள் மற்றும் அழிய கூடிய வகையில் உள்ள அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க பல நடவடிக்கைகள், மற்றும் விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில் சன்யாங் குவின் மற்றும் வென் ஜாங் ஆகிய இரு  சீன நாட்டினர் தாய்லாந்து நாட்டிற்கு  சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் பாதுகாக்க பட்ட தீவுகளான கோ ரச்சா யாய் -வில் கடலில் மூழ்கி குளித்துள்ளனர். அப்போது அவர்கள் அங்கு இருந்த நட்ச்சத்திர மீன்களை கைகளில் பிடித்து துன்பப்படுத்தியதுடன் அவற்றுடன் ஒன்றாக செல்பி எடுத்துள்ளனர்.

மேலும் அங்குள்ள பவள பாறைகளில் ஜாலியாக ஏறி நடந்து மகிழ்ந்துள்ளனர். அதற்கடுத்து அவர்கள் செய்தது அவர்களுக்கே ஆப்பை தேடி தரும் என அவர்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் தங்கள் புகைப்படங்கள் மற்றும் தன்கள் எடுத்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு உள்ளனர்.

இதுபோன்ற செயல்கள் தடைவிதிக்கப் பட்ட சூழலில் அவர்கள் செய்த செயலை பற்றி கடல்வாழ் பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். பின்இருவரிடமும் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் தங்கள் தவறினை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக பாங்காங் போஸ்ட் தெரிவித்தது.