Cricket: முகமது ஷமி ஆஸ்திரேலியா இடையேயான தொடரில் இடம்பெறவேண்டும் ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளர் கண்டனம்.
பிசிசிஐ இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டியின் வீரே பட்டியலை வெளியிட்டது திமிர்த்தனமானது. இவ்வாறு பட்டியல் வெளியிட்டதை இது இந்திய அணியின் ஆணவம் என்று கூறியிருந்தார் ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளர் ராபர்ட் கிரடாக்.

இந்தியா-நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் மூன்றாவது போட்டி நவம்பர் 1 ம் தேதி நடைபெறவுள்ளது.இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் இரவு போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது பிசிசிஐ அவசர அவசரமாக இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடருக்கான அணியின் பட்டியலை வெளியிட்டது.
இந்த செயல் இந்திய அணியின் திமிர்த்தனம் என்று கூறினார் மேலும் கூறிய அவர் ஷமி நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்த்த நிலையில் அவர் பங்கேற்கவில்லை. தொடர்ந்து வரும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வீரர் பட்டியலில் இடம் பெறவில்லை.
இது வருத்தமளிப்பதாக வும், அவர் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றும் அவர் வலைப்பயிற்சியில் பந்து வீசுவதை பார்த்தேன் சிறப்பாக பந்து வீசுகிறார் அதனால் அவர் அணியில் இடம் பெற வேண்டும் என்றும் கூறினார்.