கபடி வீரர்களுக்கான உணவு கழிவறையில் வைக்கப்பட்ட விவகாரம்… அதிகரிக்கும் கனடனங்கள்

0
79

கபடி வீரர்களுக்கான உணவு கழிவறையில் வைக்கப்பட்ட விவகாரம்… அதிகரிக்கும் கனடனங்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்று கண்டனங்களைப் பெற்று வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்டதாகக் கூறப்படும், சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. இப்படி அலட்சியமாக நடந்துகொண்டதற்காக மாவட்ட விளையாட்டு அதிகாரியை சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள் மற்றும் உணவு வழங்குபவரை ப்ளாக்லிஸ்ட்டில் சேர்த்தனர்.

இது சம்மந்தமாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், சஹரன்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் ஸ்டேடியத்தில் நடந்த சப்-ஜூனியர் பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு கழிவறையில் அரிசி மற்றும் “பூரி” வழங்கப்பட்டது.

இந்த மோசமான நிகழ்வு குறித்து அரசியல் தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த சம்பவத்தை விமர்சனம் செய்துள்ளார். இந்திய விளையாட்டு வீரர்களை இப்படி நடத்தினால் எப்படி ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார்கள் என்று கேட்டார்.

தற்போது இந்த வீடியோவை பகிர்ந்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஷிகார் தவான் “ மாநில அளவிலான கபடி வீரர்கள் இப்படி உணவு உண்பது உணமையில் மனதை வருத்தச் செய்யும் செயலாக உள்ளது. உத்தர பிரதேச முதல்வர் இதில் தலையிட்டு நல்ல முடிவைக் காணவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகளும், விளையாட்டு வீரர்களும் மதிக்கப்படுவதில்லை என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைந்துள்ளது.