ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அவர்களுக்கு ஆப்பு அடித்த எம்.எல்.ஏ! அதிர்ந்து போன கட்சி தொண்டர்கள் !!

Photo of author

By Rupa

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அவர்களுக்கு ஆப்பு அடித்த எம்.எல்.ஏ! அதிர்ந்து போன கட்சி தொண்டர்கள் !!

Rupa

Updated on:

Shocked party volunteers !!

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அவர்களுக்கு ஆப்பு அடித்த எம்.எல்.ஏ ! அதிர்ந்து போன கட்சி தொண்டர்கள் !!

தற்போது  அதிமுக ஆட்சிபெரும்  பின்னடைவை சந்தித்துவருகிறது. அன்றைய எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி கொடிகட்டி பறந்தது .அவரின் ஆட்சி போல் வேறு யாராலும் ஆட்சி செய்ய முடியாது.

மக்களுக்காக மக்களாட்சி நடத்திய பொன்மொழி செம்மல் புரட்சி தலைவர் அவர்கள் ஏழைகளின் இதயங்களில் இதய தெய்வமாய் இன்று வரை மனதில் வாழ்ந்து வருகின்றார்.

எம்.ஜி.ஆர் அவர்களின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்திட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக துவங்கப்பட்டது தான்  எம்.ஜி.ஆர் மக்கள் ஆட்சி.  அவரை அடுத்து  நாட்டை ஆண்டவர் ஜெயலலிதா அம்மா.அவர்கள் இவர் ஆட்சி காலத்தில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்  அமைச்சராக இருந்தவர்கள்.

இதைதொடர்ந்து  ஒற்றைதலைமை குறித்த விவகாரம் அக்கட்சியின் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ் மற்றும் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் அளித்த பேட்டியால் ஒற்றை தலைமை பிரச்சனை என்றும் முடியாது.

ஒற்றை தலைமை பிரச்சனையை ஆரம்பித்ததற்கு முதல் காரணமே பழனிசாமி தான்.நாட்டை ஆளும் பதவிக்கு வேறு ஒருவரை நியமித்தால்  அது ஜெயலலிதா அம்மாவிற்கு  செய்யும் துரோகம் ஆகும் என பன்னீர்செல்வம் உரத்த குரலில் தெரிவித்திருந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் இப்பேச்சு அங்கு கூடியிருந்த மக்களிடம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற  கூட்டத்தில் முன்னால் எம். எல்.ஏஅமைச்சர் ஆறுக்குட்டி கூறியது,ஒருகிணைபாளர்கள் மற்றும் துணை ஒருகிணைபாளர்கள்  என மக்களை கேட்டா  பிரித்தார்கள்? இவர்கள் இருவரும் பதவியில் இருந்து  விலக வேண்டும். வேறு ஒருவரை பொதுசெயலாளர்  பதவிக்கு நியமனம்  செய்ய வேண்டும். இந்த முடிவை மக்களே எடுக்க வேண்டும். தற்போது ஆட்சி  பின்னடைவு இருக்கும் நிலையில்  சண்டைகளும் எதிர்ப்பும் வேண்டாம் என கூறியிருந்தார்.