மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! தொடர் 6 நாட்களுக்கு மதுபான கடைகள் இயங்காது!
திருவண்ணாமலை தீப திருவிழாவானது வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த தீபத்திருவிழா திருவண்ணாமலையில் தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். கிட்டத்தட்ட அனைத்து ஊர்களிலும் இருந்து மக்கள் 30 லட்சம் பேர் வருகை புரிவர். இதனால் தமிழக அரசு சிறப்பு பேருந்து வசதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்து சமய அறநிலைத்துறை மக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் திருவண்ணாமலை தீபம் முடிந்து அடுத்த நாள் ஏழாம் தேதி வரை அருகாமையில் உள்ள மதுபான கடைகள் இயங்காது என கூறியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.