செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயாரை வீட்டில் நிரந்தரமாக குடி வைக்க எளிய வழிகள்!!

0
33
#image_title

செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயாரை வீட்டில் நிரந்தரமாக குடி வைக்க எளிய வழிகள்!!

*வீட்டில் செல்வம் செழிக்கவும் நமது வருமானம் மேற்படி அதிகரிக்கவும் மகாலட்சுமி தாயாரின் அருளை பெறவும் நம் வீட்டு சமையலறையில் சில மாற்றங்களை செய்வது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்வதன் மூலம் லட்சுமி தாயாரின் பார்வை வீட்டின் மேல்படும்.

*வீட்டில் உள்ள பொருட்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பொருட்கள் ஆங்காங்கே போட்டு வைக்காமல் நீட்டாக அடுக்கி வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால்
நேர்மறை ஆற்றலை பெறுவதோடு, மகாலட்சுமி தாயாரின் அருளும் ஆசியும் பெற முடியும்.

*அதேபோல் வீட்டு சமையல் அறை மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.
அடுத்து மகாலட்சுமி தாயாரின் அருளை பெற சமையல் அறையில் கல் உப்பு, அரிசி, வெல்லம், பருப்பு போன்ற பொருட்களை தீராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்கள் அனைத்தும் எப்போதும் நிறைவாக இருக்க வேண்டும். சற்று குறைந்தால் கூட உடனே நிரப்பி விட வேண்டும்.

*செல்வ செழிப்பை உண்டாக்கும் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பொருள்கள் நெய் ஆகும். எனவே நெய் மற்றும் அதேபோல் நல்லெண்ணெய்யும் குறைந்தால் உடனடியாக வாங்கி நிரப்பி விட வேண்டும்.

*வெள்ளிக்கிழமை நாட்களில் கல் உப்பு, சர்க்கரை, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் மிகவும் சிறப்பு. வீட்டில் இந்த பொருட்களை குறைவில்லாமல் பார்த்து கொண்டால் செல்வம் பெருகும்.

*அதேபோல் சமையலறையில் பட்டை, இலவங்கம், பெருஞ்சீரகம், பிரியாணி இலை உள்ளிட்ட வாசனை நிறைந்த பொருட்களை குறைவில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு இயற்கை வாசனை கொண்ட பொருட்கள் என்றால் இஷ்டம். இதையெல்லாம் தொடர்ந்து பின்பற்றி வந்தோம் என்றால் மகாலட்சுமி தயார் வீட்டில் நிரந்தமாக தங்கி நமக்கு செல்வ செழிப்பை உண்டாக்குவார். அதேபோல் உடல் உழைப்பும் அவசியம். இவை இரண்டும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் பொழுது அவன் கோடீஸ்வர யோகத்தை பெறுகிறான்.