இந்தியாவை பின்பற்றும் சிங்கப்பூர்! உலக அளவில் பெருமிதம்

Photo of author

By Parthipan K

இந்தியாவை பின்பற்றும் சிங்கப்பூர்! உலக அளவில் பெருமிதம்

Parthipan K

Updated on:

இந்தியாவை பின்பற்றும் சிங்கப்பூர்! உலக அளவில் பெருமிதம்

உலகெங்கும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. சீனாவில் முதலில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா ஸ்பெயின் இத்தாலி இந்தியா போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. இதன் தாக்குதலிலிருந்து சிங்கப்பூரும் தப்பவில்லை. இதுவரை சிங்கப்பூரில் கொரோனாவால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து சிங்கப்பூரின் அதிபர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 7 முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஆனால் அதே சமயத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தடையேதும் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும்போது அனைவரும் கட்டாயமாகச் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.