சகோதரன்  திட்டியதால்  சகோதரிகள் தற்கொலை! போலீஸார் விசாரணை !

0
193
Sisters commit suicide for scolding their brother! Police investigation!
Sisters commit suicide for scolding their brother! Police investigation!

சகோதரன்  திட்டியதால்  சகோதரிகள் தற்கொலை! போலீஸார் விசாரணை !

நவாப்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த குடும்பத்தில்  இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர்  ஆகியோர் உள்ளனர்.மேலும் அவர்கள் 15 வயது மற்றும் 16 வயதுடைய சகோதரிகள் இருவரை, அவர்களது சகோதரர் கோபத்தில் திட்டியுள்ளார். இதனால் இருவரும் சோகத்தில் இருந்தனர். இந்நிலையில் சோகத்தில் இருந்த சகோதரிகள் இருவரும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விஷம் குடிக்கும் முடிவை தெரிவித்து உள்ளனர்.

இதனை கேட்டு குடுபத்தினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பின்னர் சகோதரிகள் இருவரும் விஷம் குடித்துள்ளனர். இந்த தகவல் அறிந்து குடும்பத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதைதொடர்ந்து மருத்துவர் பரிசோதனை செய்தார்.சிறிது நேரத்திற்கு  முன்பு இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்தார். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleபெண் போலீஸுக்கு நடந்த சோகம்! மர்ம நபரை தேடும் அதிகாரிகள்!
Next articleWomen’s Equality Day Special – பெண்களை முன்னிலைப்படுத்தி தமிழில் வெளியான சில திரைப்படங்கள்