தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.!! அரசு அதிரடி அறிவிப்பு.!!

0
74

சிவகங்கை மாவட்டத்தில் நாளை மற்றும் வரும் 30ஆம் தேதி மதுக்கடைகளை மூட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளை மருது சகோதரர்கள் குருபூஜை மற்றும் வரும் 30ஆம் தேதி தேவர் குருபூஜையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி திருட்டுத்தனமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.