ரயில் பயணத்தில் நிம்மதியாக தூங்க.. ரயில்வே துறையின் புதிய விதிகள்!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

0
16
Sleep peacefully on train journey.. Railways' new rules!! Passengers are happy!!
Sleep peacefully on train journey.. Railways' new rules!! Passengers are happy!!

போக்குவரத்து என்று பார்க்கும் பொழுது பொதுவாகவே மூன்று வழிகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் வான்வழி போக்குவரத்து மற்றும் வாகனங்களின் மூலம் சாலை வழி போக்குவரத்து இவை மிக அதிக செலவை உள்ளடக்கியிருப்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர்.

குறைவான விலையில் டிக்கெட் பற்றிக் கொண்டு நீண்ட தூரம் நிம்மதியாக பயணிக்க அதிக அளவு மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் ரயில் பயணத்தின் பொழுது அதிலும் குறிப்பாக இரவு நேர பயணத்தின் பொழுது பல்வேறு விதமான இன்னல்களை வெளிப்படையாக சொல்ல முடியாமல் பயணிகள் சகித்துக் கொண்டு செல்ல வேண்டி இருப்பதால் அவற்றை தீர்க்கும் வண்ணம் ரயில்வே துறை முக்கிய விதிகளை வெளியிட்டு இருக்கிறது.

ரயில்வேயின் முக்கிய மற்றும் புதிய விதிகள் :-

✓ மிடில் பர்த் பயணிகள் நிம்மதியாக தூங்க இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இருக்கைகளில் யாரும் அமரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ அதே நேரத்தில், இரவு 10 மணிக்கு மேல் டிடிஆர் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவ்வாறு இரவு நேரங்களில் டிக்கெட் பரிசோதனை செய்யும் பொழுது பயணிகளால் நிம்மதியாக தூங்க ஏனெனில் அவ்வாறு இரவு நேரங்களில் டிக்கெட் பரிசோதனை செய்யும் பொழுது பயணிகளால் நிம்மதியாக தூங்க முடிவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ ஆனால், இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் ஏறக்கூடிய பயணிகளுக்கு இது பொருந்தாது என்றும் ரயில்வே துறையை தெரிவித்திருக்கிறது.

இனி ரயிலில் பயணம் செய்யும்பொழுது தூக்கத்திற்கு எந்த வித தடங்களும் இருக்காது என்றும் பயணிகள் அனைவரும் இரவு 10 மணிக்கு இருக்கைகளில் அமராமல் அவரவருடைய பர்த்தில் படுத்து உறங்கிக் கொண்டே பயணிக்கலாம் என இந்தியன் ரயில்வே துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழ் மீனவர்களும்.. படகுகளும் நிபந்தனை இன்றி விடுவிப்பு!! இலங்கைக்கு செல்லும் பிரதமர் மோடி!!
Next articleஅரசியல் அழுத்தம் காரணமா?!.. உணவுப் பாதுகப்பு துறை அதிகாரி சதீஷ் பணியிட மாற்றம்!..