மத்திய அரசுக்கு எதிராக கோஷம்!! தமிழக இளம்பெண்ணால் பரபரப்பு!!

0
33
Slogan against central government!! Tamil Nadu's young woman is sensational!!
Slogan against central government!! Tamil Nadu's young woman is sensational!!

மத்திய அரசுக்கு எதிராக கோஷம்!! தமிழக இளம்பெண்ணால் பரபரப்பு!!

கடந்த 2018 – ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் தூத்துக்குடி சேர்ந்த “லூயிஸ் சோபியா” என்ற இளம்பெண் பயணித்துள்ளார்.அதே விமானத்தில் அப்போதைய தமிழக பா.ஜனதா தலைவரும், தற்போதைய புதுவை,தெலுங்கானா கவர்னருமான “தமிழிசை சௌந்தரராஜனும் ” பயணித்தார்.

தூத்துக்குடியில் விமானம் தரை இறங்கியவுடன் லூயிஸ் சோபியா மத்திய அரசை கண்டித்தும்,விமர்சித்தும் கோஷம் எழுப்பினர்.இதனால் கோபம் கொண்ட தமிழிசை அந்த பெண்ணை தகாத வார்த்தைகளும்,,மேலும் அவருடன் இருந்த தொண்டர்களும் அந்த பெண்ணிடம் கடுமையாக நடந்த கொண்டதாக தகவல் பரவியது.

இது தொடர்பாக தூத்துக்குடி போலீசார் அந்த பெண் மீது வழக்குபதிவு செய்தனர். இச்சம்பவம் தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் , லூயிஸ் சோபியா மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடபட்டிருந்தது.

இந்த வழக்கு பலமுறை விசாரணைக்கு வந்து , நிலுவையில் இருந்து வந்தது. லூயிஸ் சோபியா அளித்த புகாரில் தமிழிசை சௌந்தராஜன் முதன்மை புகார்தாரரான இவர், தற்போது கவர்னராக பதவி வகிப்பதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார்.

அடுத்த திருப்பமாக,தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தன்னையும் வழக்கில் சேர்க்கக்கோரி மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் வழக்கு நீதிபதி தனபால் முன்பு நேற்று விசாரனைக்கு வந்தது.

அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் அன்புநிதி ஆஜராகி, தூத்துக்குடி போலீசாருக்கு இந்த பிரிவில் வழக்குபதிவு செய்ய அதிகாரம் இல்லை மற்றும் இதற்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முறையான அனுமதியும் பெறவில்லை. எனவே, மனுதாரர் லூயிஸ் சோபியா மீதான வழக்கு சட்டப்படி ஏற்புடையதல்ல என்று வாதாடினார்.

இதனை விசாரித்த நீதிபதி, லூயிஸ் சோபியா மீது பதிவான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.