ரயிலில் இனி இவர்களுக்கெல்லாம் சிறப்பு சலுகை வழங்கப்படும்!! அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!!

Photo of author

By Gayathri

ரயிலில் இனி இவர்களுக்கெல்லாம் சிறப்பு சலுகை வழங்கப்படும்!! அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!!

Gayathri

Special concessions will be given to all these people on trains from now on!! Minister Ashwini Vaishnav!!

ரயிலின் பயணம் செய்யும் பொழுது முதியவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் 45 வயதை கடந்தவர்கள் நடுவரிசை மற்றும் மேல் வரிசை படுகைகளில் தங்களுடைய டிக்கெட் இடம்பெற்று இருப்பதால் சிரமப்படுவதாகவும் இதற்கான சில முக்கிய மாற்றங்களை உருவாக்கி இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தேசிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதாவது :-

ரயிலில் பயணம் செய்யும்பொழுது முதியவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் கீழ் வரிசை படுக்கைக்காக கெஞ்ச வேண்டிய நிலை உள்ளது என்றும் அதனை மாற்றுவதற்காக புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, இனி முன்பதிவு செய்யும்பொழுது அந்த ரயிலில் உள்ள கீழ் வரிசை படுகைகள் முதியவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் முன்பதிவின் பொழுது இவை குறிப்பிடப்படவில்லை என்றால் கூட டிக்கெட் சிஸ்டம் ஆனது அதனை தானாகவே காலியாக இருக்கக்கூடிய கீழ் வரிசை படுக்கைக்கு டிக்கெட்டை மாற்றிவிடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக இந்த வசதி பயன்பாட்டிற்கு வந்த பிறகு யாரிடமும் கெஞ்ச வேண்டி இருக்காது என்றும் சில நேரங்களில் ஒரு சிலர் புரிந்து கொண்டு தங்களுடைய இருக்கைகளை மாற்றிக் கொள்வதாகவும் ஆனால் ஒரு சிலர் விடாப்படியாக தான் இதனை முன் பதிவு செய்தேன் எனவே இந்த இருக்கை தனக்கானது என்று அடாவடியாக பேசி விடுவதாகவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்