“அரசியல் டைம்பாஸ் செய்யாதீங்க; முழுமையாக இறங்குங்கள்!” – விஜய்யை தாக்கும்  நடிகை ரோஜா 

Actress Roja

திரையுலகத்தில் வெற்றி பெற்ற நடிகர்கள் அரசியலுக்கு வரும் போதும், அதை முழுமையான பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், தற்போதைய நடிகர்கள் போல் “டைம்பாஸ்” அரசியல் செய்யக்கூடாது என்றும் நடிகையும் ஆந்திரா அமைச்சருமான ரோஜா, நடிகர் விஜய்க்கு நேரடியாக அறிவுரை கூறியுள்ளார். இந்த கருத்துக்கள், நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியான “தமிழக வெற்றிக்கழகம்” எனும் பெயரில் அரசியலுக்கு களமிறங்கியிருக்கும் நேரத்தில் அவரை நேரிடையாக தாக்கும் வகையில் வெளியாகி, அரசியல் … Read more

4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல தடை: உயர் நீதிமன்ற உத்தரவால் பயணிகள் அச்சம்!

Government buses banned from pass at 4 toll plazas: Passengers fear due to High Court order!

சென்னை: தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் செல்ல தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்துகள் தடை செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, கடந்த காலத்தில் செலுத்தப்பட வேண்டிய சுங்கக் கட்டணங்கள் நிலுவையில் இருந்ததை காரணமாகக் கொண்டு வந்தது. பெரிய அளவில் நிலுவைத் தொகை – பாதிக்கப்பட்ட சாலைகள் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுமார் 70-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில், மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் வழக்கம்போல் கட்டணங்கள் … Read more

ராமதாஸ் Vs அன்புமணி –  மருமகளா? மகளா? ராமதாஸின் அடுத்த ஆட்டம்?

Ramadoss Vs Anbumani – Daughter-in-law? Daughter? Ramadoss' next Plan?

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) இப்போது நடந்து வரும் அதிகார மோதல் முடிவே இல்லாமல் தொடர்கதையாக மாறி பரபரப்பாகக் கிளம்பியுள்ளது. கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடு, தற்போது செயல்பாடுகளாக வெளிப்படத் தொடங்கியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை நீண்ட நாட்களாக நிலவி வந்த அதிருப்தி, தற்போது வெடிக்கும் நிலைக்கு வந்து விட்டது. பாமக கட்சியை கட்டுப்படுத்த விரும்பும் அதிகார மையமாக, ஒருவர் … Read more

ஜெயலலிதா என்னை தம்பி என்று அழைத்தார் – திருமாவளவன் அதிமுகவுக்கு எச்சரிக்கை

You can listen to your father rather than what someone else says - Thirumavalavan's advice to Anbumani

சென்னை: “அம்மா எனக்கு தம்பி என்று வாழ்த்து தெரிவித்தவர். அதை அ.தி.மு.க. தலைவர்கள் தெரிந்திருப்பார்கள்; இப்போது எடப்பாடி பழனிசாமி மட்டும் அதை மறந்தது ஏன் என்று புரியவில்லை,” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமீப நாட்களில் நடந்த அரசியல் விவகாரங்களைப் பற்றி விளக்கம் அளித்தார். “அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, ஜெயலலிதா எனக்கு ‘தம்பி வாழ்க’ என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். எனவே, எனது அரசியல் பயணம், … Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

rain

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வானிலை மாறுபாடுகள் தொடரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பில், 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை அல்லது மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வாய்ப்பு உள்ளதாகவும், வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, திருநெல்வேலி … Read more

கண்துடைப்புக்காக கொடுப்பதை போல கொடுத்து ஏமாற்றிய அரசாங்கம்!  கொதித்தெழுந்த அஜித்குமாரின் சகோதரர்!

Sivaganga youth Ajith Kumar's death: Govt job, DMK govt gives 5 lakh compensation to brother

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்ற கோவில் காவலாளி 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு காவல் துறையினரால் கொடூரமான முறையில் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆளும்கட்சியான் திமுகவையும், காவல்துறையினரையும் மக்களும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் கழுவி ஊற்ற ஆரம்பித்தனர். அஜித்குமார் குடும்பத்தை சேர்ந்தவர்களும் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் … Read more

யார் சொல்வது உண்மை? பறிபோன பிஞ்சு குழந்தைகளின் உயிர்? கடலூர் ரயில் கோர விபத்து சம்பவம்!

யார் சொல்வது உண்மை? பறிபோன பிஞ்சு குழந்தைகளின் உயிர்? கடலூர் ரயில் கோர விபத்து சம்பவம்!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகில் ரயில்வே கேட் உள்ளது. தினமும் 7 மணிமுதல் 7.30 மணிக்குள் சிதம்பரம் நோக்கி ரயில் செல்லும். அந்த நேரத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். ஆனால் 8.7.2025 அன்று ரயில்வே கேட் மூடப்படாமல் திறந்திருந்ததால் ரயில் இன்னும் வரவில்லை என்று நினைத்து நிறைய பேர் ரயில்வே கேட் வழியாக பயணிக்க ஆரம்பித்தனர்.   அப்போது அந்த பக்கம் வந்த தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயற்சித்துள்ளது. எதிர்பாராத விதமாக … Read more

OTP கேட்டு பொதுமக்களை மிரட்டும் திமுகவினர்! சட்டப்படி இது குற்றமா?

DMK threatens public by asking for OTP! Is it a crime under the law?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை தவெக கட்சியில் இணைத்து விட்டார். நாளுக்கு நாள் விஜய் கட்சியில் சேரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேபோல தமிழகத்தில் ரொம்ப வீக்கான நிலையில் இருந்த பாஜகவும் தங்கள் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை ஆரம்பித்து விட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துவிட்டார். இதனால் … Read more

ஆளும் கட்சியின் அழுத்தத்தால் ரிதன்யா வழக்கில் தாமதம்! பெற்றோர் கொந்தளிப்பு!

Due to the pressure of the ruling party, Rithanya's case is delayed! Parent turmoil!

திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு காரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது சாவிற்கு தனது கணவர் கவின் குமார், மாமனார் மாமியார் தான் காரணம் என்று தன்னுடைய தந்தைக்கு வாட்சப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிட்டு விட்டு தற்கொலை செய்துகொண்டார். கல்யாண நேரத்தில் 500 பவுன் தங்கம் போடுவதாக சொல்லிவிட்டு 300 பவுன் தான் பெண் வீட்டார் போட்டுள்ளதால் அனுதினமும் கவின்குமாரின் குடும்பம் … Read more

மதுரை முருக பக்தர்கள் மாநாடு: 5 லட்சத்திற்கும் அதிகமாக திரண்ட பக்தர்கள்! தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரிக்க வாய்ப்பு

Madurai Muruga Devotees Conference: More than 5 Lakh Devotees! Chances of increasing support for BJP in Tamil Nadu

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கமாக செயல்படும் இந்துமுன்னனி மதுரையில் நடத்திய முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 5 லட்சம்க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்துகொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது சமீப காலங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஆன்மிகக் கூட்டங்களிலொன்றாகும். மேலும், சட்டமன்றத் தேர்தல்கள் இன்னும் ஒரு ஆண்டுக்குள் நடக்க இருப்பதால், இந்த நிகழ்வின் பரபரப்பும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. பாஜக தலைவர்கள் பங்கேற்பு தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், முன்னாள் … Read more