சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்த நிர்வாகி! அதிரடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ் ஓபிஎஸ்!

சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்த நிர்வாகி! அதிரடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ் ஓபிஎஸ்!

சசிகலாவுக்கு அவர்களுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில், சுவரொட்டி அடித்த காரணத்திற்காக, அதிமுகவில் இருந்து மற்றொரு நிர்வாகி அதிமுகவின் தலைமையினால் அதிரடியாக நீக்கப்பட்டி ருக்கிறார். சசிகலா அவருக்கான சிகிச்சை முடிந்த பிறகு தமிழகம் திரும்ப இருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மிகச் சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் ,அதிமுகவின் உறுப்பினர்களும் அந்தந்த பகுதிகளில் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள். அந்த விதத்தில் திருச்சியில் … Read more

பாமக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திமுகவா? அதிர்ச்சியில் ஸ்டாலின் மகிழ்ச்சியில் பாமக!

பாமக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திமுகவா? அதிர்ச்சியில் ஸ்டாலின் மகிழ்ச்சியில் பாமக!

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று தெரிவித்து பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில், ஆறாவது கட்ட போராட்டமாக இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்து வருகிறது . கிராம நிர்வாக அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டங்கள் நடைபெற்றது. போராட்டத்தில் பாட்டாளி … Read more

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

இது ஒரு ஐந்து தினங்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே மழை பெய்ய ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக ராமநாதபுரம், கடலூர், புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்த சூழ்நிலையில், வெள்ளப் பாதிப்பு உருவானது. அந்த விதத்தில் சென்ற வருடம் எப்போதையும்விட மழையின் அளவு அதிகமாக இருந்தது. அதோடு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் 10ஆம் தேதி … Read more

தேவையில்லாமல் முடிச்சுப் போட வேண்டாம்! அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

தேவையில்லாமல் முடிச்சுப் போட வேண்டாம்! அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டது சசிகலா விடுதலை செய்யப்பட்டதற்கு முடிச்சுப் போட்டு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது என்று மதுரையிலே அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார். மன்னர் திருமலை நாயக்கரின் 438வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் இருக்கின்ற அவருடைய சிலைக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜு ,மற்றும் செல்லூர் ராஜு ,சட்டசபை உறுப்பினர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், போன்றோர் மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்வுக்கு பின்னர் அமைச்சர் கடம்பூர் … Read more

சசிகலாவின் உடல்நிலையில் மீண்டும் ஏற்பட்ட சிக்கல்!

சசிகலாவின் உடல்நிலையில் மீண்டும் ஏற்பட்ட சிக்கல்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் இந்த சசிகலாவுக்கு உடல்நலம் பாதிப்படைந்ததை தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறை அருகே இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சசிகலா. அந்த சமயத்தில் அவருடைய உடல்நிலை மிக மோசமாக இருந்ததை தொடர்ந்து, தினகரனின் முயற்சியால் விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார் அந்த மருத்துவமனையில் அவருக்கு செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை கொடுக்கப்பட்டது. அதன்பின் அவருக்கு உடல்நலம் சீராகி வருவதாக மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி சசிகலாவை … Read more

ஜெயலலிதாவின் வெங்கல சிலை திறப்பு! முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பு!

சென்னை வெலிங்டன் கல்லூரியில் அமைத்திருக்கும் ஜெயலலிதாவிடம் வெங்கலசிலை திறந்து வைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் அவருடைய நினைவிடம் நேற்றைய தினம் தமிழக மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை சென்னை போயஸ் தோட்டத்தில், ஜெயலலிதாவின் வேதா இல்லமும் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்துக்குள் பொதுமக்களை செல்வதற்கு அனுமதிக்கக் … Read more

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு! மேலும் ஒரு பெண் ரகசிய வாக்குமூலம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு! மேலும் ஒரு பெண் ரகசிய வாக்குமூலம்!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் போன்றவர்களை ஒரு புதூர் பாலியல் பலாத்காரம் செய்து காணொளி எடுத்த விவகாரம் மாநிலத்திலேயே மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. இந்த பாலியல் வழக்கில் வசந்தகுமார், மணிவண்ணன், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், போன்ற நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. அந்த கும்பலால் பாதிப்படைந்த மூன்று பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு, மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ … Read more

முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது! ஜெயலலிதாவின் நினைவு இல்லம்!

முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது! ஜெயலலிதாவின் நினைவு இல்லம்!

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அந்த நினைவு இல்லத்தை சற்று முன் திறந்து வைத்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இயற்கை எழுதியதை தொடர்ந்து, அவர் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்டம் பகுதியில் இருக்கின்ற வீட்டை அவருடைய நினைவு இல்லமாக மாற்றப்படுகிறது, என்று 2017ஆம் தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. இந்த நிலையில், … Read more

பிப்ரவரி 2ஆம் தேதி கூடுகிறது! நடப்பு சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர்!

பிப்ரவரி 2ஆம் தேதி கூடுகிறது! நடப்பு சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர்!

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியின் இறுதி சட்டசபையின் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி கூட இருக்கிறது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட பயம் காரணமாக தற்போது நடைபெறவிருக்கும் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கிறது இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்ற காரணத்தால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த கூட்டத் தொடரில் முதல் நாளில் உரையாற்ற இருக்கிறார். அவர் ஆற்றப் போகும் உரையில் அரசு … Read more

முதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி! சசிகலா பக்கம் செல்கிறதா?

முதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி! சசிகலா பக்கம் செல்கிறதா?

தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தர்மபுரியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த சமயத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராக வரவில்லை ,அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களால் அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.அதே நேரத்தில் சசிகலா முழுமையாக குணம் பெற்று திரும்ப வேண்டும். சசிகலா மறுபடியும் அரசியலில் காலடி எடுத்து வைக்க வேண்டும். நானும் ஒரு பெண் தான் என்ற முறையில் சசிகலாவிற்கு என்னுடைய ஆதரவானது எப்பொழுதும் இருக்கிறது என்று தெரிவித்த அவர், மறைந்த முதலமைச்சர் … Read more