தமிழக அரசை பாராட்டிய மத்திய அரசு! எதற்கு தெரியுமா?

தமிழக அரசை பாராட்டிய மத்திய அரசு! எதற்கு தெரியுமா?

கொரோனா தடுப்பு பணி தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு மறுபடியும் பாராட்டு தெரிவித்து இருக்கிறது. கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பு மருந்தை வினியோகம் செய்வதற்கு இந்திய நாடு தன்னை தயார் படுத்தி வரும் சூழ்நிலையில், சென்னையில் அதற்கு ஏற்ற ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் நேற்றைய தினம் நேரில் ஆய்வு செய்தார். சென்னையில் இருக்கின்ற அரசு மருத்துவமனை, அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கும் தடுப்பு மருந்து அதோடு … Read more

கோயமுத்தூரில் பெண் தாக்கப்பட்ட விவகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி உத்தரவு! கலக்கத்தில் ஸ்டாலின்!

கோயமுத்தூரில் பெண் தாக்கப்பட்ட விவகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி உத்தரவு! கலக்கத்தில் ஸ்டாலின்!

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் பகுதியிலே, திமுக சார்பாக மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்குபெற்ற ஸ்டாலினிடம் அதிமுகவைச் சேர்ந்த மகளிர் அணி துணைத் தலைவர் பூங்கொடி வாக்குவாதம் செய்து இருக்கின்றார். இதன் காரணமாக, கோபமுற்ற திமுகவினர் அவரை தாக்கியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பூங்கொடி ஆதரவாக வந்த முனி, பூங்கொடி, மகேஸ்வரி, ராஜன் உள்ளிட்டோரும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள் பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்தால், ஆதித்தமிழர் மக்கள் … Read more

திமுக போட்ட புதிய வழக்கு! தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திமுக போட்ட புதிய வழக்கு! தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தபால் ஓட்டுக்கள் சம்பந்தமாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் 80 வயதிற்கு அதிகமானோர், மற்றும் மாற்றுத்திறனாளிகள், தபால் வாக்கு அளிக்கும் முறையை அமல்படுத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில், தபால் வாக்குகளை பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரிகள் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் கொடுக்க வேண்டும் … Read more

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் விறு விறு! தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் விறு விறு! தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சர், ஆகியோர் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். தமிழர்களுடைய மிக முக்கிய பண்டிகையான,பொங்கல் பண்டிகையின் பொழுது தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கமான ஒன்று. ஜல்லிக்கட்டு போட்டியானது, அலங்காநல்லூர், பாலமேடு அவனியாபுரம், போன்ற இடங்களில் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையிலே, இந்த வருடம் கொரோனா காரணமாக, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஆனாலும் … Read more

அமித்ஷாவின் தமிழக வருகை திடீர் ரத்து! ஏன் தெரியுமா?

அமித்ஷாவின் தமிழக வருகை திடீர் ரத்து! ஏன் தெரியுமா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சட்டசபை தேர்தலையொட்டி பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மத்திய அமைச்சர்கள் என அனைவரும் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா காரணமாக, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படாத சூழ்நிலையில், அரசு விழாவில் பங்கேற்பதற்காக நவம்பர் மாதம் 23ம் தேதி சென்னை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவருக்கு ஆளும் கட்சியான அதிமுக, மற்றும் அவருடைய கட்சியான பாஜகவை சார்ந்தவர்களும், … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு! வலுக்கும் கண்டனங்கள்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு! வலுக்கும் கண்டனங்கள்!

பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து, ஆளும்தரப்பு தங்கள் கட்சியினரை காப்பாற்றியிருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றம் சுமத்தியிருக்கிறார். பொள்ளாச்சியிலே, மாணவிகள், மற்றும் இளம்பெண்களை சமூக வலைதளம் மூலமாக பழகி அவர்களை தனி இடத்திற்கு வரச் சொல்லி மிரட்டி பாலியல் தொந்தரவு தந்து காணொளி எடுத்த விவகாரம் தமிழகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கிலே, இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளர் அருளானந்தம், உள்பட மூன்று நபர்களை சிபிஐ அதிகாரிகள் இன்றைய தினம் கைது … Read more

பொள்ளாச்சி வழக்கு! பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்!

பொள்ளாச்சி வழக்கு! பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிற குற்றவாளிகளுக்கும், அதிமுகவின் பெரும் புள்ளிகளுக்கும் இருக்கின்ற தொடர்புகளையும், விசாரிக்கவேண்டும் என்று திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிற அருளானந்தன் அதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட இருக்கிறார். 2019 ஆம் வருடம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச காணொளி எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை … Read more

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரானது, எதிர்வரும் 21ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி எட்டு நாட்கள் மட்டுமே நடந்து செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி முடிவுற்றது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மற்றும் சமூக இடைவெளி போன்றவை பின்பற்றப்பட்டும் 25ந்திற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ,மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களுக்கும், கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, கூட்டத்தொடர் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. கொரோனா பரவலானது டெல்லியிலே … Read more

வாக்குறுதியை நிறைவேற்றால் விட்டால் பதவி எதற்கு கமல்ஹாசன் அதிரடி!

வாக்குறுதியை நிறைவேற்றால் விட்டால் பதவி எதற்கு கமல்ஹாசன் அதிரடி!

மக்கள் நீதி மையத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால், அவர்கள் ராஜினாமா செய்து விடுவார்கள் என்று கமல்ஹாசன் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மதுரை போன்ற தென்மாவட்டங்களில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அதன்பிறகு இல்லத்தரசிகளுக்கு ஊதியம், ஒவ்வொரு வீட்டிற்கும் இன்டர்நெட், ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்துவது, போன்ற பல … Read more

மீண்டும் கைது செய்யப்பட்ட ஹேமந்த்! காரணம் என்ன தெரியுமா?

மீண்டும் கைது செய்யப்பட்ட ஹேமந்த்! காரணம் என்ன தெரியுமா?

சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்றைய தினம் கைது செய்திருக்கிறார்கள். சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்து முன்னரே ஹேமந்த் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆறு வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற மோசடி புகாரில் ஹேமந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை ஜெ.ஜெ நகர் பகுதியைச் சேர்ந்த ஆஷா மனோகரன் சென்ற 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி காவல்துறையில் … Read more