இருசக்கர வாகனத்தில் சென்றவரை அரிவாளால் தாக்கி வழிப்பறி..! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!!

இருசக்கர வாகனத்தில் சென்றவரை அரிவாளால் தாக்கி வழிப்பறி..! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!!

மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை அரிவாளால் தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மதுரை சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் வீரகனூர் பகுதியில் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள், அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் ராஜாவை பயங்கரமாக தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் … Read more

2020 – 21ம் கல்வியாண்டு ரத்தா..? மத்திய கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!

2020 - 21ம் கல்வியாண்டு ரத்தா..? மத்திய கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!

நடப்பு கல்வியாண்டு ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்‌ அளித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அடுத்த கல்வியாண்டு (2020 – 21) தொடங்கிய நிலையிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால், கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து எந்த ஒரு நிலையான முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால், 2020 – … Read more

மகாளய அமாவாசையில் புண்ணிய ஸ்தலங்களில் குவிந்த மக்கள்!அலட்சியம் காட்டிய தமிழக அரசு!

மகாளய அமாவாசையில் புண்ணிய ஸ்தலங்களில் குவிந்த மக்கள்!அலட்சியம் காட்டிய தமிழக அரசு!

கொரோனாவின் காரணமாக பொதுமக்கள் கூட்டம் கூட தடை இருக்கும் இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு  புண்ணிய ஸ்தலங்களில்  மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக கூடியது அதிர்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு மாத அமாவாசைக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். குறிப்பாக தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன, நேற்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை ஆதலால் அச்சு காரணமாக 144 தடை உத்தரவு உள்ளதால் மகாளய அமாவாசை … Read more

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பேடிஎம் செயலி !!

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பேடிஎம் செயலி !!

கூகுள் நிறுவனமானது ஆன்லைன் சூதாட்ட விதிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் விளையாட்டு பந்தயத்தை எளிதாக்கும் எந்த ஒரு கட்டுப்பாடு கட்டுப்பாடற்ற சூதாட்டங்களை பயன்பாடுகளை ஆதரிக்க மாட்டோம் என்று கூகுள் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனமானது ,எந்த ஒரு சூதாட்ட பயன்பாட்டிற்கும் ஒப்புதல் அளிக்காது என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.ஆனால், பேடிஎம் எந்த ஒரு விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை கூகுள் நிறுவனம் முன்வைத்துள்ளது. கூகுள் நிறுவனமானது, இன்று இந்தியாவில் விளையாட்டு சூதாட்ட … Read more

மீண்டும் ரயில் கட்டணம் உயர தொடங்கும் :! ரயில்வே வாரிய தலைமை அதிகாரி அறிவிப்பு !!

மீண்டும் ரயில் கட்டணம் உயர தொடங்கும் :! ரயில்வே வாரிய தலைமை அதிகாரி அறிவிப்பு !!

கடந்த சில நாட்களாக ரயில் நிர்வாகம் தொடர்ந்து நஷ்டத்தில் இருந்த வரும் நிலையில், சரக்கு ரயில் கட்டணங்களை கொண்டு சமாளிக்கலாம் என்று ரயில்வே வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை அதிகரித்தால் மட்டுமே ரயில்வே வாரியம் சமநிலை அடையும் என்பதை கருத்தில் கொண்டு , ரயில்வே வாரிய தலைமை நிர்வாகி வி.கே.யாதவ் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக செய்தியாளர்களிடம் பேசிய போது  கட்டண உயர்வு குறித்து தெரிவித்துள்ளார்.மேலும் ,இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை ரயில்வே … Read more

கோவையில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டுயானை வழுக்கி விழுந்து உயிரிழப்பு !!

கோவையில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டுயானை வழுக்கி விழுந்து உயிரிழப்பு !!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயத்துடன் சுற்றி திரிந்த காட்டு யானை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லித்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு காட்டு யானை வயிறு மற்றும் முழங்கால் காயத்துடன் சுற்றி திரிந்தது.இந்த யானைக்கு வயது சுமார் 20 இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்த யானையை 2 கும்கி யானைகள் வரவழைத்து அதனை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயன்றனர். பின்பு ,அந்த யானையைப் … Read more

கொரோனா தொற்றால் பாதித்த 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் குணமடைந்துள்ளனர்.. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

கொரோனா தொற்றால் பாதித்த 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் குணமடைந்துள்ளனர்.. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா காலத்திலும் அரசு மருத்துவமனைகளில் இதர மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 542 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதேப்போல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 372 குழந்தைகளும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெற்றோர்களுடன் அனுமதிக்கப்பட்ட 30 … Read more

இறுதியாண்டு தேர்வுகளை பார்த்து எழுத பல்கலைகழகம் அனுமதி !!

இறுதியாண்டு தேர்வுகளை பார்த்து எழுத பல்கலைகழகம் அனுமதி !!

கொரோனா காலத்தில் மாணவர்களின் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், இறுதி பருவத் தேர்வுகள் மட்டும் மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்று யுஜிசி தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகள் எழுதும் மாணவர்கள் புத்தகங்களை வைத்து விடைத்தாள் எழுதலாம் என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புதுவை பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் ,இறுதி பருவத்தேர்வு எழுத ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என மாணவர்களின் விருப்பம் போல தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது. பல்கலைக்கழக … Read more

கிசான் திட்டத்தை தொடர்ந்து ஆவாஸ் யோஜனா திட்டத்திலும் மோசடி !!

கிசான் திட்டத்தை தொடர்ந்து ஆவாஸ் யோஜனா திட்டத்திலும் மோசடி !!

தமிழகத்தில் கிசான் திட்டத்தில் மோசடி நடந்துள்ளதை தொடர்ந்து, தற்பொழுது ஆவாஸ் யோஜனா திட்டத்திலும் மோசடி நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் கூரை வீட்டில் இருந்த காங்கிரட் வீட்டுக்கு மாற்றப்பட்டதாக கோவிந்தன் என்பவருக்கு வந்த கடிதத்தை கண்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் ,2017-19 ஆம் ஆண்டு பிரதமரின் கான்கிரீட் வீடு திட்டம் செயலுக்கு வந்த நிலையில், 2016-ம் ஆண்டே கோவிந்தன் என்பவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இல்லாத ஒருவர் எப்படி வீடு கட்டி இருக்க … Read more

இனி இந்த நாட்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை..! தமிழக அரசு அறிவிப்பு!!

இனி இந்த நாட்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை..! தமிழக அரசு அறிவிப்பு!!

மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றுகையில், தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடும்ப அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியை மேற்கொண்டனர். மேலும், ரேஷன் கடையின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு … Read more