கொரோனா இல்லா 5 தமிழக மாவட்டங்கள்

கொரோனா இல்லா 5 தமிழக மாவட்டங்கள்

கொரோனா இல்லா 5 தமிழக மாவட்டங்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னையில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, வேகமாக தமிழகம் முழுவதும் பரவியது. தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையுடன் இனைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகிறது. தமிழகத்தில் சென்னை கொரோனா தொற்றில் முதலிடம் வகுத்து வரும் நிலையில், தமிழக மக்களுக்கு ஆறுதலான செய்தி கூறப்பட்டுள்ளது. ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த … Read more

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் தனிமைப் படுத்தப்படுவார்கள் – திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் தனிமைப் படுத்தப்படுவார்கள் - திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் தனிமைப் படுத்தப்படுவார்கள் –  திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இது குறித்து மருத்துவர்கள் மற்றும் வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு இன்று கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் குறித்த வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.  அதில் இடம்பெற்றுள்ள வழிமுறைகள்: ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படும். மாவட்டம் விட்டு மாவட்டம் … Read more

இரண்டாம் கட்ட திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – விவசாயிகள் உட்பட பலருக்கு சலுகை

இரண்டாம் கட்ட திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் - விவசாயிகள் உட்பட பலருக்கு சலுகை

இரண்டாம் கட்ட திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – விவசாயிகள் உட்பட பலருக்கு சலுகை கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தாததையடுத்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதை மீட்கும் பொருட்டு ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என பாரத பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் … Read more

இரு மடங்காக உயரும் ஆம்னி பேருந்து கட்டணம்

இரு மடங்காக உயரும் ஆம்னி பேருந்து கட்டணம்

இரு மடங்காக உயரும் ஆம்னி பேருந்து கட்டணம் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆம்னி பஸ் என்று அழைக்கப்படும் தனியார் பேருந்து சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனிடையே பல மாநில அரசுகள், சமூக இடைவெளியுடன் போக்குவரத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது, இந்நிலையில் ஆம்னி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தால், டிக்கெட் விலை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசு சார்பில் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி வழங்கியதும் … Read more

எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் – தமிழக ஆட்சியர் அதிரடி

எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் - தமிழக ஆட்சியர் அதிரடி

எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் – தமிழக ஆட்சியர் அதிரடி கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசும், அதிகாரிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி நகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் மாவட்ட கலக்டரான மலர் விழி. அதன்படி கீழ்க்கண்ட விதிகளை அமல்படுத்தியுள்ளார்: தர்மபுரி நகராட்சி பகுதியில் வசிக்கும் 33 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு செல்வதற்காக வார்டு வாரியாக ஒவ்வொரு … Read more

நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் – டாஸ்மாக் வழக்கில் அரசு பதில் மனு

நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் - டாஸ்மாக் வழக்கில் அரசு பதில் மனு

நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் – டாஸ்மாக் வழக்கில் அரசு பதில் மனு தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 8ம் தேதி முதல் சென்னை தவிர்த்துப் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. டாஸ்மாக் கடைகளைத் திறக்க உயர்நீதி மன்றம் சில விதிமுறைகளை விதித்திருந்தது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உயர்நீதி மன்ற விதிகள் மதிக்கப்படாததை சுட்டிக்காட்டி, மதுபான கடைகள் உடனடியாக மூட வேண்டும் என பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. … Read more

மீண்டும் தள்ளிப் போகிறதா 10ம் வகுப்பு பொது தேர்வு?

மீண்டும் தள்ளிப் போகிறதா 10ம் வகுப்பு பொது தேர்வு?

மீண்டும் தள்ளிப் போகிறதா 10ம் வகுப்பு பொது தேர்வு? கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு, கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை இறுதியாண்டு தேர்வை ரத்து செய்த தமிழக அரசு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இதனால் பத்தாம் வகுப்பு பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இது குறித்து ஆலோசனை நடத்திய பள்ளி … Read more

கொரோனாவால் இந்தியாவில் 12.50 கோடி பேர் வேலையிழப்பு!

கொரோனாவால் இந்தியாவில் 12.50 கோடி பேர் வேலையிழப்பு!

கொரோனாவால் இந்தியாவில் 12.50 கோடி பேர் வேலையிழப்பு! கொரோனாவால் முடங்கியுள்ள இந்திய பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. அதனை சரி செய்யும் பொருட்டு இந்திய அரசு 20 லட்சம் கோடி நிதி உதவியை அறிவித்துள்ள நிலையில், இந்திய வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில்,கடந்த ஏப்ரலில், 12.20 கோடி பேர் வேலையிழந்துள்ளதாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான, CMIE அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா பரவலைத் தடுக்க மார்ச், … Read more

ஊரடங்கால் மலேரியா, காசநோய் இறப்புகள் அதிகரிக்கும் – எச்சரிக்கும் ஆய்வு முடிவு

ஊரடங்கால் மலேரியா, காசநோய் இறப்புகள் அதிகரிக்கும் - எச்சரிக்கும் ஆய்வு முடிவு

ஊரடங்கால் மலேரியா, காசநோய் இறப்புகள் அதிகரிக்கும் – எச்சரிக்கும் ஆய்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் முதல் உலகத்தின் பார்வை முழுவதும் கொரோனா நோய் மீது மட்டுமே உள்ளது. இதனால் கொரோனா நோய்க்கு மட்டுமே முன்னுரிமை அளித்து உலக நாடுகள் சிகிச்சையளித்து வருகின்றன. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் ஒவ்வொரு ஊரடங்கும் காசநோய் உள்ளவர்களை பெரிதும் பாதிக்கும் என்றும் இதனால் இறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. … Read more

இந்தியாவில் கொரோனா தொற்று 75 ஆயிரத்தை நெருங்குகிறது : ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதிய உச்சம்..!!

இந்தியாவில் கொரோனா தொற்று 75 ஆயிரத்தை நெருங்குகிறது : ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதிய உச்சம்..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 43 லட்சத்து 42 ஆயிரத்து 565 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more