12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனியார் வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு!!
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியாக செயல்பட்டு வரும் ஆக்சிஸ் வங்கியில் காலியாக உள்ள “Documents Collection Officer” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் ஆன்லைன் வழியாக மே 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
வேலை வகை: தனியார் வங்கி வேலை
நிறுவனம்: ஆக்சிஸ் வங்கி
பணி:
*Documents Collection Officer
காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 37 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 30 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வங்கி விதிமுறைப்படி மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
*நேர்காணல்
*எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இப்பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய 31-05-2024 இறுதி நாள் ஆகும்.

