மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்.. மாதம் ரூ.1200!! உடனே விண்ணப்பியுங்கள் இதுவே கடைசி நாள்!!

0
180
super plan for students.. Rs.1200 per month!! Apply now this is the last day!!
super plan for students.. Rs.1200 per month!! Apply now this is the last day!!

மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்.. மாதம் ரூ.1200!! உடனே விண்ணப்பியுங்கள் இதுவே கடைசி நாள்!!

மத்திய மற்றும் மாநில அரசால் வருடம் தோறும் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பித்தால் இதன் மூலம் வரும் உதவித்தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

அந்த வகையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்து மதம் மாறிய ஆதிதிராவிடர் என இவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் இதற்கான விண்ணப்பம் தொடங்கி பிப்ரவரி மாதம் 28ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

முன்பாகவே பழங்குடியின , ஆதிதிராவிட மாணவர்கள் என அனைவருக்கும் பல்வேறு உதவி திட்டங்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக மத்திய அரசுடன் இணைந்து இந்த திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்த கடந்த வருடம் தான் இணையதளம் உருவாக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர்கள் அதிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

எனவே தமிழக அரசு கொடுத்துள்ள கால அவகாசத்திற்குள் அவர்கள் வழங்கிய இணையதளத்திற்கு  http://tnadtwscholarship.tn.gov.in  சென்று ஆதார் எண் மற்றும் வருமானச் சான்றிதழ், சாதி சான்று உள்ளிட்டவை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.

அதேபோல இந்த மெட்ரிக் உதவி திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு உதவித்தொகை பெறும் மாணவர்கள் இந்த இணையத்தின் மூலமே தங்களது விண்ணப்பத்தை புதுப்பித்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர்.

இந்த திட்டமானது ஆதிதிராவிடர் மாணவர்களிடம் கொண்டு வந்ததற்கான காரணம் அவர்களின் கல்வித் திறனை உயர்த்த தான் என கூறுகின்றனர். எனவே மாணவர்கள் முறையாக இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.