அஜீத் அழகைப் பார்த்து வெச்சக்கண்ணு வாங்காம பார்த்த தபு! ரகசியம் சொன்ன பிரபல பத்திரிக்கையாளர்!

0
50
#image_title

அஜீத் அழகைப் பார்த்து வெச்சக்கண்ணு வாங்காம பார்த்த தபு! ரகசியம் சொன்ன பிரபல பத்திரிக்கையாளர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரை ‘தல’ என்று அவரது ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.

அஜித் தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, ஆசை, காதல் கோட்டை, வான்மதி, முகவரி, வாலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இவருக்கு முதன் முதலாக நல்ல அடையாளத்தை கொடுத்த படம் என்றால் ஆசையும், காதல் கோட்டை படமும் தான். அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் கோடான கோடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து நட்சத்திர நாயகனாக அஜித் உயர்ந்துள்ளார்.

இந்நிலையில், செய்யாறு பாலு ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் அஜித்தை குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், அஜித் சாதாரண அழகு கிடையாது. பேரழகு கொண்டவர். அவரை பார்த்த அத்தனை பெண்களும் அவர் மேல் காதல் வயப்பட்டுவிடுவார்கள். ஒருமுறை நான் ‘கண்டுக்கொண்டேன்.. கண்டுக்கொண்டேன்…’ படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அங்கு பரபரப்பாக படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது.

அப்போது, தபுவும், அஜித்தை நடித்துக் கொண்டிருந்தார்கள். தபு களைப்பாகி வந்து அமர்ந்து விட்டார். அப்போது அஜித் மட்டும் படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அஜித் நடிப்பதை வைத்த கண் வாங்காமல் தபு பார்த்துக் கொண்டிருந்தார். அதை நான் கவனித்து விட்டேன். உடனே நான் பத்திரிகையில் இது குறித்து எழுதியே விட்டேன். அந்த அளவிற்கு அஜித் ஆணழகன் என்று செய்யாறு பாலு வெளிப்படையாக பேசினார்.

author avatar
Gayathri