தலைவர் பதவிக்கான ஆசையில் காய் நகர்த்துறாங்க: போட்டு உடைத்தார் நேரு!
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை தொடர வேண்டும் என்பதற்காக, முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார். சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதத்தில், இந்த திட்டம் கிடைக்காது என்பதால், நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படுவதற்கு சில ஊராட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மற்ற சிலர் இதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது, 375 ஊராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால், கலெக்டர் தலைமையிலான குழு அந்த கோரிக்கைகளை பரிசீலிக்கும். … Read more