தமிழகம்: தொடர்ந்து 3ஆவது நாளாக உயரும் கொரோனா பாதிப்பு!

தமிழகம்: தொடர்ந்து 3ஆவது நாளாக உயரும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை நேற்று அறிக்கை வெளியிட்டது.அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 1,631 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,30,592-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் தமிழகத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதால் இதனால் இதுவரை மொத்தமாக … Read more

வீட்டு விநாயகரையும் கடலில் கரைக்கக் கூடாது- அரசு தடை!

வீட்டு விநாயகரையும் கடலில் கரைக்கக் கூடாது- அரசு தடை!

சாந்தோம் முதல் நேப்பியார் வரையிலான கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சிலைகள் வைக்கப்படும் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 1,587 பேருக்கு பாதிப்பு

கடந்த இரு நாள்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் செவ்வாயன்று 1,544 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று 1,587 பேராக உயர்ந்துள்ளது. தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன் கிழமை (செப்.8) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,587 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,27,365-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை முந்தைய நாட்களை விட குறைவாக அதாவது … Read more

ஈரோடு-தாராபுரம் அகல ரயில்பாதை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த எல்.முருகன்

ஈரோடு-தாராபுரம் அகல ரயில்பாதை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த எல்.முருகன்

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகல ரயில் பாதை குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேற்று சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது , ‘‘மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கை என தெரிவித்த முருகன் வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு … Read more

பள்ளிகள் மூடப்படுமா : மாணவர்களுக்கு தொடரும் கொரோனா பாதிப்பு!

பள்ளிகள் மூடப்படுமா : மாணவர்களுக்கு தொடரும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கோயம்பத்தூர், புதுக்கோட்டை, கரூர், திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பரவல் காரண மாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 1-ஆம் தேதி கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டன. இந்நிலையில், கோவை சூலூரை அடுத்த சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி … Read more

உள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் இன்று (06.09.21) ஆலோசனை நடத்த உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூரும் தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் … Read more

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!! 

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!! 

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!!  டிசம்பர் 27-ஆம் தேதி என்று தமிழகம் முழுவதும்,பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. வேலை நிறுத்தத்திற்கான காரணங்களாக தலைவர் எஸ் எம்.ஆர்.குமாரசாமி அவர்கள் கூறியிருப்பது, வேககட்டுப்பாட்டு கருவி தயாரிக்கும் 49 நிறுவனங்களில் 12 நிறுவனங்களுக்கு மட்டுமே தமிழகத்தில் தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதாகவும் மேலும் வாகன உரிமைகள் அனைத்து பகுதிகளிலும் புதுப்பித்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கவும் டீசல் மீதான வாட் … Read more

மக்களே உஷார்:! மீறினால் 5000 ரூபாய் அபராதம்!

மக்களே உஷார்:! மீறினால் 5000 ரூபாய் அபராதம்!

மக்களே உஷார்:! மீறினால் 5,000 ரூபாய் அபராதம்!   தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து 8-ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும்,ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து,செப்டம்பர் 8 தேதியன்று தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த … Read more

ஓய்வூதியம் ரத்து என்று வெளிவந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி நிதித்துறை விளக்கம்!

ஓய்வூதியம் ரத்து என்று வெளிவந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி நிதித்துறை விளக்கம்!

ஓய்வூதியம் ரத்து என்று வெளிவந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி நிதித்துறை விளக்கம்! தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும், அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் தமிழக அரசால் செலுத்தப்பட்டு வருகின்றது.மேலும் பணியின்போது இறந்த அரசு ஊழியர்களுக்கு அவர்களது குடும்ப நலன் கருதி அவர்களின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.அரசு ஊழியர்கள் ஓய்வுதியம் பெற வேண்டுமென்றால் அவர்கள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் குறித்து,கடந்த 17ஆம் தேதி கருவூலக் கணக்கு … Read more

ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு!

ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு!

ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு! தொடர் மழையின் காரணத்தால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 45,000 கன அடி நீர் வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்புகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக அதிக மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. கபினி அணை, கிருஷ்ணராஜ ஆகிய அணைகளுக்கு வரும் நீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து சுமார் வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வருகின்றது. … Read more