அரிசிகளில் புழுக்களா?அதை போக்க சுலபமான வழிமுறைகள்!!
நம் முன்னோர்கள் காலத்தில் எல்லாம் அரிசி மூட்டையாக எடுத்து வைத்து கொள்வார்கள். அதில் வண்டு புழு போன்றவை வராமல் பார்த்துக் கொள்வார்கள்.
மேலும் அந்த காலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி, அரிசியை பாலீஷ் செய்யாமல் உபயோகித்தார்கள். ஆனால் இன்று, மாதந்தோறும் நமக்கு தேவையான அளவுகளில் அரிசியை வாங்குகிறோம். மாதாமாதம் வாங்கும்போதே நாம் உபயோகிக்கும் அரிசிகளில் வண்டு, புழு ஆகியவை வந்து விடுகிறது.
நாம் வாங்கும் அரிசி குறைந்த விலையோ, அதிக விலையோ அதில் புழு வந்துவிட்டால் நமக்கு மிகுந்த கஷ்டமாகிவிடும். அதனை சமைக்கவும் முடியாது. இதுவே கிராமப்புறங்களில் உள்ளவர்கள் சல்லடை கொண்டு சுத்தம் செய்வார்கள். அல்லது வெயில் காயவைப்பார்கள். ஆனால் தற்போது வேலைக்கு செல்பவர்களால் இதை எல்லாம் செய்ய முடியாது. ஆகையால் கையில் உள்ள பொருட்களை வைத்து அரிசியில் உள்ள புழுக்களை எப்படி விரட்டலாம் என பார்க்கலாம்.