குஜராத்தில் நேர்ந்த கோர சம்பவம் – 13 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் சூரத்தில், ஏடாகூடமாக ஓடிய லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த மனிதர்கள் மீது மிகவும் வேகமாக பாய்ந்துவிட்டது. இந்த கோர சம்பவத்தில் 13 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 நபர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நபர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமன்றி சம்பவ நேரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர … Read more

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்!

குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், ஒற்றுமை தினவிழாவை முடித்த பிறகு, அங்கிருந்தே இன்று காலை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு செயலாற்றும் படி  அறிவுறுத்தினார். ஐஏஎஸ் பயிற்சி காலத்தை முழுமையாக முடித்து விட்டு அரசு அதிகாரிகளாய் செயல்பட தயாராக இருக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அனைத்து அதிகாரிகளுக்கும் சிறப்புரை வழங்கினார்.  அப்போது மக்கள்தான் அரசு அதிகாரத்திற்கு உடைய  உண்மையான உந்துசக்தி என்பதை குறிப்பிட்டார். அதுமட்டுமன்றி ஜ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் … Read more

தமிழ் மொழிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார் – பாரதியாரின் பாடல் வரிகளை பாடினார்!

இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம். குஜராத் மாநிலத்தின் நீர்வழி விமானத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலை ‘ஒற்றுமை சிலை’ என்று அழைக்கப்படுகிறது. அந்த பிரம்மாண்டமான சிலைக்கு பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை உற்சாகத்துடன் ரசித்தார்.  அதன்பின் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி பாரதியாரின் … Read more

இந்தியாவில் முதல்முறையாக யூடியூப் நேரலை வழக்கு விசாரணை ஒளிபரப்பு !!

  இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் முதல் முறையாக யூடியூப் நேரலை வழக்கு விசாரணை ஒளிபரப்பு நடத்தப்பட்டது. இதுநாள் வரை உயர் நீதிமன்ற விசாரணைகள் குறித்து தகவல் அறிவது கடினமாக ஒன்றாக இருந்து வந்த நிலையில், இந்தியாவிலேயே முதன்முறையாக வழக்கு விசாரணை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் யூடியூப் மூலமாக நேரலை ஒளிபரப்பு முறையை குஜராத் உயர்நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று தலைமை நீதிபதி விக்ரம்நாத் அமர்வில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில், முதல்முறையாக யூடியூப் சேனலில் ஒளிபரப்பு … Read more

தமிழக முதல்வரின் கோரிக்கையை நிராகரித்தது குஜராத் அரசு! தமிழர்கள் அதிர்ச்சி

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

அகமதாபாத் தமிழ் பள்ளியை திறக்க முடியாது என்று திட்டவட்டம் – தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது குஜராத் அரசு நிராகரித்ததால் தமிழர்கள் அதிர்ச்சி… குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மணிநகரில் செயல்பட்டு வந்த தமிழ் மேனிலைப் பள்ளியை அம்மாநில அரசு மூடியது. இதற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும் கண்டனம் தெரிவித்து, பள்ளியை திறக்க தமிழக அரசும், பிரதமர் மோடியும் நடவடிக்கை எடுக்க … Read more

குஜராத்தில் ஒரு ஹத்ராஸ் !! தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் தொல்லை !!

உத்தரபிரதேச மாநிலம் ஹதராசில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி ஓயும் முன்பே, அடுத்தடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்யப்பட்டு, உடல் பாகங்கள் வெட்டி கொன்று வரும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. உத்தரபிரதேசம் ,மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. குஜராத் மாநிலம் ஜாம்நகர் மகாதேவ் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் … Read more

நீங்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா !! உங்களுக்கான முக்கிய செய்தி !!

இந்தியாவில், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கருப்புப் பணம் மற்றும் அதிக அளவில் கள்ள நோட்டுக்கள் ஒழிப்பதற்காக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது இந்த உயர் மதிப்பு நோட்டுக்களான ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1,000 நோட்டுகளை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, அவற்றை அருகிலிருந்த வங்கிகளில் கொடுத்து புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் 500 மற்றும் 2000 நோட்டுகளை பெற்று பயன்படுத்தும் படி மத்திய அரசு கூறியது. புதியதாக … Read more

வீடியோ கான்பிரன்ஸ் விசாரணையில் நீதிமன்ற அவமதிப்பு !! ஆத்திரமடைந்த நீதிபதி கொடுத்த தண்டனை

நீதிமன்றத்தின் காணொளி மூலம் வீடியோ கான்பிரன்ஸ் விசாரணை நடத்தப்பட்டபோது சிகிரெட் பிடித்துக் கொண்டிருந்த வழக்கறிஞருக்கு குஜராத் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதமாக கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பினால் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களின் வழக்குகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தி வருகின்றனர் .தற்பொழுது மத்திய அரசு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்த போதிலும், முக்கியமான வழக்குகள் மட்டுமே நேரடி விசாரணைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.மீதமுள்ள வழக்குகளை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், குஜராத் உயர்நீதிமன்றத்தில் … Read more

குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியை திறக்க வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

மாணவர்களின் சேர்க்கையை காரணமாக வைத்து குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் செயல்பட்டு வந்த தமிழ் வழியிலான பள்ளியை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இது குறித்த முழுமையான செய்தியை படிக்க: மோடியின் தொகுதியிலிருந்த ஒரே தமிழ் பள்ளியும் மூட உத்தரவு! இது தான் தமிழுக்கு அளிக்கும் முக்கியத்துவமா? இந்நிலையில் மாணவர் சேர்க்கையை காரணமாக வைத்து குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியை திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் … Read more

மோடியின் தொகுதியிலிருந்த ஒரே தமிழ் பள்ளியும் மூட உத்தரவு! இது தான் தமிழுக்கு அளிக்கும் முக்கியத்துவமா?

Modi-News4 Tamil Online Tamil News

மோடியின் தொகுதியிலிருந்த ஒரே தமிழ் பள்ளியும் மூட உத்தரவு! இது தான் தமிழுக்கு அளிக்கும் முக்கியத்துவமா? அகமதாபாத்தில் உள்ள ஒரே ஒரு தமிழ் மேனிலைப் பள்ளியை மூடும் நடவடிக்கைக்கு மாணவர்களும், பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மணிநகரில் உள்ளது அகமதாபாத் தமிழ் மேனிலைப் பள்ளி. கிருஷ்ணமாச்சார்ய பண்டித் என்பவர் தமிழ் மக்களுக்காகவும், அவர்களது கல்விக்காகவும் மட்டுமே இந்த இடம் பயன்பட வேண்டும் என்று இடத்தை ஒதுக்கி இந்தப் பள்ளியை நிறுவியுள்ளார். இந்தியாவின் … Read more