சிறுவன் மீது டீசல் ஊற்றி கொலை! சிறிய சண்டையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!   

சிறுவன் மீது டீசல் ஊற்றி கொலை! சிறிய சண்டையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்! 14 வயது சிறுவனும் 7 வயது சிறுவனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.இருவரும் பிரேம்நகர் காலனியில் ஒன்றாக வசித்து வந்தனர்.இருவரும் வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்தார்கள்.அப்போது அவர் இருவருக்கிடையே வாக்குவாதம் எற்பட்டு அது கைகலப்பாக மாறியது. அந்த நேரத்தில் 7 வயது சிறுவன் மிகவும் கோபமடைந்துள்ளான். கோவமடைந்ததையடுத்து தன்னை மறந்து அருகில் அவனது தந்தையின் ஆட்டோ ரிக்சாவில் இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து 14 … Read more

திருமணமான 5 நாளில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட புது மாப்பிள்ளை! மாமனார் வெறிச்செயல்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீரபுரம் பகுதியைச் சார்ந்தவர் முத்தரசன். இவருக்கு திருத்துறைபூண்டி நகர் பகுதியிலுள்ள மங்களநாயகி புரத்தைச் சேர்ந்த அரவிந்தியா என்ற பெண்ணை பெற்றோர் திருமணத்திற்கு வரன் பார்த்தனர். அதன் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு தன்னுடைய வீட்டில் மனைவியுடன் முத்தரசன் வசித்து வந்தார். இதனையடுத்து கடந்த 15ஆம் தேதி மாமனார் வீட்டில் நடந்த விருந்தில் முத்தரசன் தன்னுடைய மனைவியுடன் பங்கேற்று கொண்டு அங்கேயே … Read more

உடன் பணிபுரிந்தவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற சக பணியாளர்! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

சென்னை போரூர் ஆர்.ஏ. நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புது நல்லூர் கிராமத்தில் இருக்கின்றனர் ரப்பர் தயாரிப்பு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார் அதே நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் செந்தூர்பாண்டி. இவர்கள் இருவருக்கும் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்திற்கு தண்ணீர் விடுவது தொடர்பாக தகராறு உண்டாகியிருக்கிறது. இதில் செந்தூர்பாண்டி சுராஜ் அவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்திருக்கிறார். இது குறித்து சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு … Read more

மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த கொடூர கணவன்! காவல்துறையினர் அதிரடி கைது!

சேலம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் கீர்த்தி ராஜ் மற்றும் தனஸ்ரீ தம்பதியினர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த சூழ்நிலையில், கீர்த்தி ராஜ் வரதட்சணை கேட்டு மனைவியை அடிக்கடி கொடுமைப் படுத்தியதாக தெரிகிறது. கணவரின் கொடுமை காரணமாக, வீட்டை விட்டு வெளியேறிய தனஸ்ரீ தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மனைவியை சமாதானம் செய்து நேற்று வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார் கீர்த்தி ராஜ். அன்று இரவே தங்களுடைய மகள் தற்கொலை செய்து கொண்டதாக தனஸ்ரீ … Read more

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி! தூத்துக்குடி அருகே பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கருப்புசாமி, கனகலட்சுமி இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். குடிபோதைக்கு அடிமையான கருப்புசாமி மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், கடந்த 7ஆம் தேதி கருப்பசாமி வீட்டுக்கு வெளியே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக தட்டாப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையின்போது கனகலட்சுமி மீது சந்தேகம் … Read more

பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட முன்விரோதம்; இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்ட இளைஞர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கௌரி பேட்டை கம்பர் தெருவைச் சேர்ந்த மனோஜ் என்பவர் சொந்தமாக டிராக்டர் வைத்து குடியிருப்புப் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழ்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம்போல ஆவடி பகுதியில் மனோஜ் தண்ணீர் விநியோகம் செய்துகொண்டிருந்தார். அதன் பிறகு மற்றொரு குடியிருப்புக்கு மனோஜ் டிராக்டரில் செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த பிரபு, சதீஷ், உள்ளிட்ட 3 பேர் வழிமறித்திருக்கிறார்கள். அதன் பிறகு எதிர்பாராதவிதமாக திடீரென்று இரும்பு கம்பியால் … Read more

தமிழகத்தில் தொடரும் அவலம்! காதலை ஏற்க மறுத்த 11ம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து

அத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி திண்டுக்கல் ரோட்டிலுள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று 11ம் வகுப்பு கடைசி தேர்வை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் பகுதியில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் திடீரென்று மாணவியின் கழுத்து உட்பட 10 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். மாணவி அருகிலிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக … Read more

பிறந்தநாள் விழாவில் மது விருந்து கொண்டாட்டம்! பிறந்த நாள் இறந்த நாளாக முடிந்த சோகம்!

நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து உள்ளிட்ட இதுபோன்ற பல துர்சம்பவங்களுக்கு காரணமாக, இருப்பது மதுதான்.அந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தாலும் அரசாங்கமும் அதிலிருந்து வரும் லாபத்தை மட்டும்தான் பார்க்கிறதே தவிர பொது மக்களின் வாழ்க்கை சீரழிவை கொஞ்சமும் நினைத்துப் பார்ப்பதில்லை. மாறாக இந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்திலிருந்து எவ்வளவு வருமானம் வந்தது? அடுத்த மாதம் எவ்வளவு வருமானம் வரும்? 1 வருடத்திற்கு டாஸ்மாக் நிறுவனத்திலிருந்து எவ்வளவு வருமானம் வரும்? என்பதை … Read more

ராமேஸ்வரம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மீனவப்பெண்!

நாட்டில் பெண்களுக்கு எதிராக குற்றம் உழைப்பவர்களை தண்டிக்கும் வகையில் பல சட்டதிட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த சட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று தான் சொல்லவேண்டும். செயல்பாட்டிலிருக்கும் சில சட்டதிட்டங்களும் குற்றவாளிகளுக்கு போதுமான தண்டனை வழங்கப்படுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு இருந்தால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் மீண்டும், மீண்டும், நடைபெறுவதற்கான வாய்ப்பு இருந்திருக்காது. ஏதோ பெயருக்கு ஒருவர் அது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு விட்டால் அவர்களுக்கு … Read more

சொத்தில் பங்கு தராததால் சொந்த மைத்துனராலேயே அடித்துக் கொல்லப்பட்ட விவசாயி!

பாகல்கோட்டை மாவட்டம் சிறுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈரப்பா இவருடைய மகன் சங்கப்பா இவர் ஒரு விவசாயி என சொல்லப்படுகிறது. இவருடைய சகோதரியை ரமேஷ் அங்கடி என்பவர் திருமணம் செய்திருக்கிறார். மகளை திருமணம் செய்திருந்ததால் ஈரப்பா தன்னுடைய மருமகன் ரமேஷ் அங்கடிக்கு விவசாயம் செய்வதற்காக சிறிய நிலத்தை வழங்கியிருந்தார். இந்த நிலத்திற்கு அருகே இருக்கின்ற தோட்டத்தில் சங்கப்பா விவசாயம் செய்து வந்தார் என சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சங்கப்பாவிடம் இருக்கின்ற விவசாய தோட்டத்தில் பாதி நிலத்தை கொடுக்குமாறு ரமேஷ் … Read more