புறநகர் ரயில்களில் இனி இவர்களும் பயணிக்கலாம்…! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சென்னை புறநகர் ரயில்களில் தனியார், ஊடக ஊழியர்களும் செல்ல தெற்கு ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டன. பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் இதில் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. … Read more

சென்னையில் அக். 5 முதல் இவர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னையில் வரும் 5ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மட்டும் வரும் 5ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. தமிழக அரசால் அங்கிகரிக்கப்பட்ட அத்தியாவசிய பயணியாளர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணியாளர்களுக்காக முதலில் குறைந்த அளவில் மட்டுமே புறநகர் … Read more