புறநகர் ரயில்களில் இனி இவர்களும் பயணிக்கலாம்…! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
சென்னை புறநகர் ரயில்களில் தனியார், ஊடக ஊழியர்களும் செல்ல தெற்கு ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டன. பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் இதில் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. … Read more