பொற்காலத்தை நோக்கி தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது – நடிகர் கமல்ஹாசன்!!

0
124
#image_title

பொற்காலத்தை நோக்கி தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது – நடிகர் கமல்ஹாசன்!!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தை பற்றி பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா பொற்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று கூறியுள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஸன்ஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் 2 படத்தையும் தயாரித்துள்ளது. இதற்கு மத்தியில் இந்த திரைப்படத்தை பற்றி நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பொன்னியின் செல்வன் 2 படத்தை பற்றி ” அனைத்து படைப்புகளிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த கருத்து வேறுபாடுகள் பொன்னியின் செல்வன் 2 படத்திலும் இருக்கின்றது. இருந்தாலும் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு மக்கள் பெருமளவு வரவேற்பு கொடுத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது.

பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுப்பதற்கே துணிச்சல் வேண்டும். அனேகமாக தமிழ் சினிமா மெல்ல மெல்ல பொற்காலத்தை நோக்கி நகர்கின்றது. இது ஒரு நல்ல அறிகுறி என்று நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பொன்னியின் செல்வன் 2 படத்தைப் பற்றி கூறியுள்ளார்.

author avatar
Savitha