தமிழ் மீனவர்களும்.. படகுகளும் நிபந்தனை இன்றி விடுவிப்பு!! இலங்கைக்கு செல்லும் பிரதமர் மோடி!!

0
10
Tamil fishermen and boats released unconditionally!! Prime Minister Modi to visit Sri Lanka!!
Tamil fishermen and boats released unconditionally!! Prime Minister Modi to visit Sri Lanka!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக அரசு முறை பயணத்தில் இலங்கைக்கு சென்று இலங்கை அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது அரசு முறை பயணமாக இன்று இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செல்ல இருக்கிறார்.

அரசு முறை பயணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக் அவர்களை சந்தித்து மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்க இருப்பதாகவும் அதனை தொடர்ந்து 8 ஒப்பந்தங்களில் கையெழுத்து இட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு இருப்பதால் இலங்கையில் இருக்கக்கூடிய 100 தமிழ் மீனவர்களின் படகுகள் மற்றும் தமிழ் மீனவர்கள் எந்த வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட இருக்கின்றனர். அதனோடு கூடவே மேலும் 75 தமிழ் மீனவர்களின் படகுகள் இலங்கை அரசின் பொதுவுடமையாக மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றப்பட்ட படகுகள் பிரதமர் நரேந்திர மோடி தன் பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பின்பு நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த Google!! இப்படி நடந்தால் மட்டுமே தப்பிக்க வாய்ப்பு!!
Next articleரயில் பயணத்தில் நிம்மதியாக தூங்க.. ரயில்வே துறையின் புதிய விதிகள்!! மகிழ்ச்சியில் பயணிகள்!!