8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.58,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை..!!

0
200
#image_title

8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.58,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை..!!

தமிழக அரசுக்கு கீழ் செயல்பட்டு வரும் சென்னை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் (Directorate of Prosecution) அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 05 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் (Directorate of Prosecution)

பணியிடம்: சென்னை

பதவி: அலுவலக உதவியாளர்(Office Assistant)

கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் சென்னை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகப்பட்ச வயது 32 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 15,700 முதல் 58,100/- வரை ஊதியம் வழங்கப்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 05.01.2024

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

முகவரி:

இயக்குநர், குற்ற வழக்கு தொடர்வுத்துறை, நெ.5, காமராஜர் சாலை, சென்னை 600 005 ஆகும்.