தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை-வானிலை ஆய்வு மையம்.!!

0
134

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி உள்ளது. அதனால், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக, கடந்து ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, சிவகங்கை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும். சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌