கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

0
37

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அடுத்து அவரது நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் என அனைவரது வீடுகளிலும் அமலாக்கத்துறையானது தொடர் சோதனை நடத்தி வருகிறது.

குறிப்பாக அவரது தம்பி சேகர் பாபு உள்ளிட்டோரை அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்தும் தற்பொழுது வரை ஒத்துழைப்பு தராமல் காலம் தாழ்த்தியே வருகின்றனர்.

அந்த வரிசையில் திமுக ஒன்றிய செயலாளர் வீராசாமி நாதன் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். முதல் குழுவானது இவரது வீட்டிலும் இரண்டாவது குழுவானது இவருடைய தோட்டத்து வீட்டிலும் சோதனை நடத்தியது.

இவரது தோட்டத்து வீட்டில் சோதனை நடத்திய பொழுது இவரது தாய் மட்டுமே இருந்துள்ளார்.மேற்கொண்டு சோதனையில் ஓர் லாக்கரின் சாவி மட்டும் இவரது தாயாரிடம் இல்லாமல் இவர் வசிக்கும் கோயம்புத்தூர் வீட்டில் இருந்துள்ளது.

உடனடியாக சாமிநாதனின் உதவியாளர் கோயம்புத்தூரில் இருந்து சோதனை நடக்கும் தோட்டத்து வீட்டிற்கு வந்து அந்த லாக்கரின் சாவியை அமலாக்க துறையினரிடம் கொடுத்துள்ளார்.

பின்பு அமலாக்க துறையினர் அந்த லாக்கரில் உள்ள ஆவணங்களை எடுத்து சோதனை செய்துள்ளனர். இதில் எண்ணற்ற முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இவர் ஒயின் ஷாப் தொடங்குவதற்கு பல பேரிடம் பணம் பெற்று வழங்கி வந்ததாக புகார் வந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறுகின்றனர்.