காதலிப்பதாக கூறி இளைஞன் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த தாய்!

0
76
The act of a young man claiming to be in love! Shocked mother!
The act of a young man claiming to be in love! Shocked mother!

காதலிப்பதாக கூறி இளைஞன் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த தாய்!

பெண்களை பொறுத்தவரை யாராவது ஆசை வார்த்தை கூறினாலோ அல்லது அன்பாக பேசினாலோ போதும் அவர்களை சுலபமாக நம்பி விடுகிறார்கள். அதுவும் குறிப்பாக சின்ன குழந்தைகளை எதற்கு அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

அதே போல் சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 12 வது படிக்கும் மாணவிக்கும் இதே நிலை ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் சோர்ந்து காணப்பட்டு உள்ளார்.

அந்த பெண்ணின் பெயர் சஞ்சனா பெயர் மாற்றப்பட்டது. தனது தாயாரிடம் தனக்கு உடல்நிலை சரி இல்லாமல் உள்ளது என தனது தாயாரிடம் கூறி உள்ளார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தாயார் மருத்துவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

சிறுமி 8 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறி உள்ளனர். பிறகு சிறுமியிடம் என்ன நடந்தது என விசாரித்த பொது அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் 22 வயதுடைய நபர் தான் காரணம் என கூறி உள்ளார். மேலும் அவர் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியதையும் கூறி உள்ளார்.

இதை தொடர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த தாய் உடனே அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மாரீஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டான் எனவே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போக்சோ சட்டத்தின் மூலம் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.