பாதியிலேயே படத்தை விட்டு ஓடிய நடிகை!! அரவிந்த் சாமி என்ன செய்தார் தெரியுமா?

Photo of author

By CineDesk

பாதியிலேயே படத்தை விட்டு ஓடிய நடிகை!! அரவிந்த் சாமி என்ன செய்தார் தெரியுமா?

CineDesk

The actress who ran away from the film halfway!! Do you know what Arvind Sami did?

பாதியிலேயே படத்தை விட்டு ஓடிய நடிகை!! அரவிந்த் சாமி என்ன செய்தார் தெரியுமா?

முதல் திரைப்படத்திலேயே தனது பன்முகத் திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று 90 களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் தான் அரவிந்த் சாமி ஆவார்.

90 களில் வெளிவந்த இவரின் படங்கள் அனைத்தும் வெற்றி வாகையை சூடியது. இவர் தனது முதல் படமான தளபதியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரிய பிரபலங்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து இவருக்கு இயக்குனர் மணிரத்னம் அடுத்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார். எனவே, அடுத்தடுத்து இவருக்கு பாம்பே, ரோஜா போன்ற திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

இவரின் ரோஜா படம் மாபெரும் வெற்றி வாகையை சூடியது. அதைத்தொடர்ந்து பாம்பே படமும் இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்த்தை தேடி தந்தது.

இந்த பாம்பே படத்தின் படப்பிடிப்பின் போது இதில் நடிகையாக நடித்த மனிஷா கொய்ராலா இப்படத்தில் என்னால் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க முடியாது என்று கூறி படத்தில் இருந்து விலகி தன் ஊரிற்கு சென்று விட்டார்.

இதைக்கேட்ட அனைவரும் மனிஷா கொய்ராலாவிடம், அவர் எவ்வளவு பெரிய மனிதர் தெரியுமா, அவர் படத்தில் நீ நடிக்க உனக்கு வாய்ப்பு கிடைத்தது ஒரு புண்ணியம் என்று கூறி வந்தனர். இதை எல்லாம் கேட்டபிறகு தான் இவர் திரும்ப நடிக்க வந்தார்.

ஏற்கனவே இப்படத்தில் நடிக்க முதலில் அரவிந்த் சாமி ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் மணிரத்னம் கூறிய பிறகுதான் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில், மனிஷா கொய்ராலா பாதியிலேயே படத்தை விட்டு விட்டு சென்றதால் படத்தை நிறுத்த முடிவு செய்தனர். ஆனால் பிறகு மனிஷா ஒப்புக்கொண்டு வந்ததால் பாம்பே படம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.