அரசு  தேர்வுகள்  இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! பொது தேர்வு எழுதும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!

Photo of author

By Parthipan K

அரசு  தேர்வுகள்  இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! பொது தேர்வு எழுதும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!

Parthipan K

The announcement issued by the Government Examinations! Attention 11th class students writing public exam!

அரசு  தேர்வுகள்  இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! பொது தேர்வு எழுதும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!

பெருந்தொற்றின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது.அதனால் போக்குவரத்து சேவைகளும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. பொது தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முடிவடைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியது.

இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொது தேர்வு அட்டவணை அண்மையில் தான் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மானவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 19 ஆம் தேதி பொது தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்வினை எழுத  தமிழகத்தில் சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நடப்பு கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது பெயர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தேர்வு எழுத போகும் மாணவ மாணவிகளுக்கு ஆலோசனைபடி இன்று முதல் வரும் பத்தாம் தேதி வரை பெயர் பட்டியலில் மாற்றங்களை செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.