மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு! உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் இலவசம்!

Photo of author

By CineDesk

மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு! உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் இலவசம்!

CineDesk

The announcement issued by the state government! Fees are free for higher education students!

மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு! உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் இலவசம்!

ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்புக்கான முழுத்தொகையினையும் மாநில அரசு வழங்குவது தொடர்பான அரசானை வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக  மாணவர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிரிருக்க வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைபெற்ற மாணவர்கள் அந்நிறுவனங்களில் சேர்வதற்காக கலந்து கொண்ட நுழைவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் பட்டியல், சேர்க்கை ஆணை, கல்வி நிறுவத்தின் தலைவரால் வழங்கப்படும் உண்மைச் சான்றிதழ் மற்றும் அக்கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் அனைத்து கட்டண விவரங்களுடன் அம்மாணவர்களில் சொந்த மாவட்டத்தின் ஆட்சித்தலைவரின் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் விண்ணப்பித்த மாணவர்களின் அனைத்து சான்றிதல்களையும் சரிபார்த்து மேற்படி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களில் படிப்பிற்காக ஆகும் மொத்த செலவின் விவரங்களுடன் தொழில்நுட்பக்கல்வி இயக்கத்திற்கு பரிந்துரை செய்து கருத்துரு அனுப்பவேண்டும்.

ஆட்சித் தலைவரிடமிருந்து பெறப்படும் பரிந்துரையினை ஆராய்ந்து உயர்கல்விக்காக ஆகும் செலவினத்தினை கணக்கீடு செய்து உரிய  நிதி ஒதுக்கீடு ஆணை பிரப்பிக்கக்கோரி தொழிநுட்ப கல்வி இயக்கம் அரசுக்கு அனுப்பவேண்டும். கருத்துருவினை ஆய்வு செய்து நன்றாக பரிசீலித்து முதலாம் ஆண்டிலேயே 4 ஆண்டுகளுக்கான செலவினத் தொகைக்கு நிர்வாக ஒப்புதலினை அளித்தும் முதலாம் ஆண்டிற்கான செலவினை ஒப்பளிப்பு செய்தும் அரசால் ஆணை வெளியிடப்படும்.