ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் பலி! பரபரப்பு சம்பவம்!

Photo of author

By Parthipan K

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் பலி! பரபரப்பு சம்பவம்!

Parthipan K

a-government-bus-and-a-tata-magic-vehicle-collide-head-on-causing-an-accident-eight-people-admitted-to-the-hospital

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் பலி! பரபரப்பு சம்பவம்!

சேலம் மாவட்டம் ஓமலூர் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி.இவர் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வருகின்றார்.இவர் பூசாரிப்பட்டியிலிருந்து நாமக்கல் மாவட்டம் குமராபாளையத்திற்கு மூன்று சக்கர ஆட்டோவில் பூ ஏற்றிக்கொண்டு குமாரபாளையத்தை நோக்கி சங்ககிரி அடுத்துள்ள பச்சம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்த விபத்தில் ஆட்டோவில் வந்த பூ வியாபாரி செல்வராணிக்கு  பலத்த காயம் ஏற்பட்டது.மேலும் ஆட்டோ ஓட்டுனர் மயில்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து செல்வராணியை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதனையடுத்து இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மயில்சாமி உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.