சொந்த மகளுக்கு தந்தை செய்த காரியம்! சென்னையில் பரபரப்பு!

0
160

தான் பெற்ற மகளையே பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் தான் சென்னை சோழிங்கநல்லூரில் பகுதியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

 

சோழிங்கநல்லூர் அடுத்த உள்ள செம்மஞ்சேரி என்ற பகுதியில் 14 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். திடீரென்று நேற்று காலையில் அந்த சிறுமிக்கு வாந்தி மற்றும் மயக்கம் வந்துள்ளது.

 

இதனால் மிகவும் கவலை அடைந்த அவரது தாய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுமிக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக உள்ளதாக சொல்லியுள்ளனர். 6 மாத கர்ப்பமாக உள்ளதாக சொல்லியுள்ளனர்.

 

இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அருகில் உள்ள கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

புகாரில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்துள்ளது. புகாரில் சிறுமியின் தந்தை வர்கீஸ் என்பவர் தான் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 54 வயதுடைய இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் பெரிய மகளை அவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெரிய மகளை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

 

இதனால் சிறுமியின் தந்தை வர்கீஸ் என்பவரின் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

author avatar
Kowsalya