News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
Saturday, June 28, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Home
  • Breaking News
  • Business
  • State
  • News
  • National
  • Education
  • Life Style
  • Entertainment
  • District News
  • Health Tips
  • Technology
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Crime முகநூல் காதலில் விழுந்த பெண்! பெற்ற குழந்தையை ஒரே நாளில் கொன்ற கொடூர தாய்!
  • Crime
  • State

முகநூல் காதலில் விழுந்த பெண்! பெற்ற குழந்தையை ஒரே நாளில் கொன்ற கொடூர தாய்!

By
Hasini
-
July 6, 2021
0
162
The girl who fell in love with Facebook! The cruel mother who killed her child in one day!
The girl who fell in love with Facebook! The cruel mother who killed her child in one day!
Follow us on Google News

முகநூல் காதலில் விழுந்த பெண்! பெற்ற குழந்தையை ஒரே நாளில் கொன்ற கொடூர தாய்!

இன்றைய தலைமுறையில் உள்ள பெண்கள் பலரும் முகநூலின் மூலம் அறிமுகம் இல்லாத நபர்களிடம் மிகச்சுலபமாக பேசி பழகுகின்றனர். அப்படி பேசுபவர்கள் யார்? என்ன? என்று தெரியாத அளவிற்கு கூட பேசி பழகுகின்றனர். பொதுவாக முகநூலிலும் ஒரு நபரை பற்றிய தகவல்கள் அனைத்தும் பொய்யாகவே பதியப்படுகின்றன. இது பெரும்பாலும் பெண்களுக்கு தெரிவதே இல்லை.

அவர்கள் அந்த பதிவுகள் எல்லாம் உண்மை என்றே நம்புகின்றனர். புகைப்படம் முதற்கொண்டு அனைத்தும் பொய்யாகவும், போலியாகவும் இருக்கின்றது. ஒரு முகநூல் காதலுக்காக தான் பெற்ற குழந்தையை ஒரே அன்று இரவே கொன்ற கொடூர தாயை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கிறோம்.

கேரள மாநிலத்தின், கொல்லம் மாவட்டத்தில், பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் மோகனன். இவர் ஒரு விவசாயி. இவருடைய மனைவி ரேஷ்மா. 24 வயதான ரேஷ்மா கர்ப்பிணியாக இருந்தார். கடந்த மாதம் அழகான பெண் குழந்தை ஒன்றையும் வீட்டிலேயே பெற்றெடுத்துள்ளார். ஆனால் கணவர் மற்றும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் அன்று இரவே அந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று ஒரு இடத்தில் குழி தோண்டி புதைத்து விட்டார்.

குழந்தை குறித்து தனது கணவன் கேட்டபோது குழந்தை பிறக்கும் போதே இறந்து பிறந்ததாகக் கூறி சமாளித்து விட்டார். ஆனால் அவர் மேல் சந்தேகம் அடைந்த கணவன் போலீசில் புகார் தெரிவித்தார். குழந்தையை கொலை செய்து புதைத்த தும்அவருக்கு தெரியவந்துள்ளது. எனவே போலீசாரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன் விபரங்கள் என்னவென்றால் ரேஷ்மாவுக்கு முகநூல் மூலம் அனந்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இரண்டு பேரும் நேரில் சந்திக்காமலேயே பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ரேஷ்மா அனந்துவின் காதல் வலையில் விழுந்துள்ளார்.

இதையடுத்து அனந்துவை திருமணம் செய்ய ரேஷ்மா ஆசைப்பட்டார். அதற்கு தன் பிஞ்சு குழந்தை இடையூறாக இருக்கும் என்று கருதிய ரேஷ்மா, கள்ள காதல் கண்ணை மறைத்தது கூட தெரியாமல், இதயத்தை கல்லாக்கிக் கொண்டு பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த  குழந்தையை அன்று இரவே கொலைசெய்து புதைத்திருக்கிறார். அவர் குழந்தையை கொன்ற  விஷயம் தனது கள்ளக்காதலனுக்கு கூறாமல் இருந்திருக்கிறார்.

இதற்கிடையே விசாரணையை தீவிர படுத்திய போலீசார் ரேஷ்மாவை கைது செய்தனர். இந்நிலையில் குழந்தையை கொலை செய்த ரேஷ்மாவை தூண்டியதாக அவரது முகநூல் காதலன் ஆனந்தை கைது செய்யவும் போலீசார் தீர்மானித்தனர். இதையடுத்து அனந்து பயன்படுத்திய செல்போன் செயல்பாட்டை போலீசார் ஆய்வு செய்து அவரை தேடி வந்தனர். ஆனால் அந்த நபர் கிடைக்கவில்லை.

இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் ரேஷ்மா உடன் முகநூல் மூலம் பேசிய நபர் ஆணே அல்ல, இரண்டு பெண்கள் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதனை அடுத்து அந்தப் பெண்கள் குறித்த விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கலுவாதிகள் என்ற ஊரைச் சேர்ந்த ரஞ்சித் மனைவி ஆர்யா என்ற 23 வயது பெண்ணும், ராதாகிருஷ்ணனின் மகள் 22 வயது சுருதி என்ற பெண்ணும், என்று தெரியவந்தது.

இந்த இரண்டு பெண்களும் அனந்து, என்ற போலி அக்கவுண்ட் மூலம் இனிக்க இனிக்க ரேஷ்மாவிடன் ஆண் குரலில் பேசி, நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். ஒரே குரலில் இரண்டு பெண்களும் பேசியது கூட, பாவம் ரேஷ்மாவுக்கு தெரியவில்லை. ஒரு வருட காலமாக அவர்கள் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் அனந்து என்ற நபர் தன்னை உண்மையாகவே காதலிப்பதாக கருதிய ரேஷ்மா, அவரை காதலிக்க தொடங்கி உள்ளார்.

அந்த அனந்துவின் கனிவான பேச்சு மூலம் மனதை பறிகொடுத்த ரேஷ்மா, தனது கள்ளக் காதலனை கைபிடித்த வேண்டி குழந்தையை கொலை செய்துள்ளார். இந்த விவரங்கள் அனைத்தும் பத்திரிகையில் வெளியானது. அது அந்த இரண்டு பெண்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கில் போலீசார் கைது செய்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் உறைந்து போயினர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்து அங்குள்ள ஆற்றில் ஒரே நேரத்தில், குதித்து தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் போலீசார் நடத்திய விசாரணையின்போது, ரேஷ்மா கைது செய்யப்பட்ட, இரண்டு நாட்களில் இந்த பெண்கள் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

முகநூல் மூலம் விளையாட்டாக இரண்டு பெண்கள் செய்த நாடகம் ஒரு குழந்தையை கொலை செய்யும் அளவுக்கு ஒரு தாயை ஆகிவிட்டது. முகநூல் நட்பின் மூலம் இவ்வளவு  விபரீதத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

எனவே மக்களே எந்த பழக்கமாக இருந்தாலும் முடிந்தவரை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள் அதுவே நமக்கு பாதுகாப்பானது. அனைவருக்கும் பாதுகாப்பானது.

Join Our WhatsApp Channel
  • TAGS
  • affair
  • Face Book
  • fake account
  • Just Born Baby
  • Kerala
  • Murder
  • Two Girls
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleடிவி ஷோவில் இவருடன் மோதிய வனிதா! வெளியேறிய உண்மை காரணம் இதுதானாம்!
    Next articleபெண்களுக்கு அரசு வழங்கும் 700000  வரையான கடனுதவி! உடனே அப்ளை செய்யுங்கள்!
    Hasini
    Hasini
    http://www.news4tamil.com