நான் அவன் இல்லை எனும் படத்தில் வருவதைப் போன்று பெண்களை ஏமாற்றிய வாலிபர்?

0
61

நான் அவன் இல்லை எனும் படத்தில் வருவதைப் போன்று பெண்களை ஏமாற்றிய வாலிபர்

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்தவர் என்ஜினீயரிங் பட்டதாரியான ராகேஷ் சர்மா (வயது 36). இவர் மேட்ரிமோனி மூலம் கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணிடம், அறிமுகம் ஆனார்.இளம் பெண்ணிடம் பேசி ஆசை வார்த்தைகள் காட்டி திருமணம் செய்து கொள்வதாக அந்தப் பெண்ணிடமிருந்து ஐந்தரை இலட்சம் பணமும் 20 சவரன் நகையையும் பறித்துள்ளார்.

கொஞ்சம் கொஞ்சமாக அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த இளம்பெண் இதனைப் பற்றி தன் தந்தையிடம் கூறியுள்ளார்.இதனையடுத்து இளம் பெண்ணின் தந்தை இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் அந்த பெண்ணிற்கு ராஜேஷ் போன் செய்து rs.20000 தேவைப்படுவதாகவும் அதை தருமாறும் அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.போலீசாரின் அறிவுரையின்படி அந்த பெண் தான் பணம் தருவதாக கூறி ராகேஷை மாதவரம் ரவுண்டானா அருகே வரும்படி கூறியுள்ளார்.பணம் வாங்குவதற்காக வந்த ராகேஷை மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போது பல உண்மைகள் வெளிவந்தன.இவர் திருமணமாகி மனைவியைப் பிரிந்துள்ளார்.இதன்பிறகு அவர் கத்தாரில் வேலை செய்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பிய இவர் இந்த இளம் பெண்ணை போன்ற இருபதுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உள்ளது தெரிய வந்தது.மேலும் நான் அவனில்லை படத்தில் வருவதைப்போல பெண்களை ஏமாற்றினேன் என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து இந்த இளைஞரால் ஏமாந்த பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும் நிலையில் அவர்களது நகையும் பணமும் மீட்டுத் தரப்படும் என்றும் அவ்வாறு புகார் அளிக்கும் பெண்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

author avatar
Pavithra