பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் நடந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் பெண்

0
86
death
death

பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் நடந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் பெண்

பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலிசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சி கோவில் ரோடு, திருவேங்கடம்பாளையம், புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தா, இவர்களுக்கு வெங்கடேஷ், கார்த்திக் என இரண்டு மகன்களும், மீனா, வனிதா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சாந்தாவின் கணவர்  ராஜா கடந்த 6  வருடத்திற்கு முன்பு உயிரிழந்தார். மூத்த மகன் வெங்கடேஷ் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எங்கையோ சென்று விட்டார் . சாந்தா தனது 2 ஆவது மகன் கார்த்திக் உடன் வசித்து வந்தார். சாந்தாவும், கார்த்திக்கும் இவர்கள் இருவரும் கட்டட சித்தாள் வேலை செய்து வந்தனர்.

இவர்கள் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மது அருந்திவிட்டு அங்கேயே  தூங்கிவிடுவதை வழக்கமாக கொண்டவர்கள்.

சாந்தா செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு குடிபோதையில் வனிதா வீட்டிற்கு வந்தார். பின்னர் 7 மணி அளவில் காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வதாக கூறி சென்று விட்டார் .

சுமார் 11 மணி அளவில் கார்த்திக் தனது தங்கை வனிதா வீட்டிற்கு வந்து வனித்தாவின் கணவரிடம் அம்மாவுக்கு சாப்பாடு வாங்கிகொண்டு காய்கறி மார்க்கெட் சென்று பார்த்த போது சந்தையின் மேல்பகுதியில் அம்மா  தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக கூறினார்.

இதனை தொடர்ந்து உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலிசார்,  தண்ணீர் அருந்தும் தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு காரணத்திற்காக நடந்ததா என பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
CineDesk