பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி! கொதித்தெழுந்த கிராம மக்கள் இருவருக்கும் கொடுத்த  அதிர்ச்சி தண்டனை!! 

0
112
The husband and wife who practiced witchcraft! Shocking punishment given to both by the angry villagers!!
The husband and wife who practiced witchcraft! Shocking punishment given to both by the angry villagers!!

பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி! கொதித்தெழுந்த கிராம மக்கள்  இருவருக்கும் கொடுத்த  அதிர்ச்சி தண்டனை!! 

பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி இருவருக்கும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூதனமான முறையில் தண்டனை கொடுத்துள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி என்ற கிராமத்தில் கணவன் மனைவி இருவர் பில்லி சூனியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இருவரையும் அங்குள்ள மரம் ஒன்றில் கட்டி வைத்து அடி வெளுத்துள்ளனர். பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை ஒட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வீடியோவில் உள்ள காட்சியில் தம்பதியர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருப்பதையும், அவர்களைச் சுற்றி கிராம மக்கள் கூட்டமாக நிற்பதையும் காண முடிகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சதாசிவப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொல்குரு கிராமத்தில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் போலீஸ் விசாரணையில் தம்பதியினரான  யாதையா மற்றும் அவரது மனைவி ஷியாமம்மா ஆகிய இருவரும் சூனியம் செய்து வந்ததாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் காரணமாக கிராம மக்களில் சிலர் அவர்களது வீட்டுக்குள் புகுந்து அவர்களை இழுத்துச் சென்று அங்கு உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்நிலையில்  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தம்பதியை மீட்டுள்ளனர்.

அந்த தம்பதியினருக்கு பலத்த காயம் எதுவும் இல்லை எனவும், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் நவீன்  தெரிவித்துள்ளார்.