தாலிக்கயிற்றின் மூலம் கொலை செய்த கணவன்! பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

0
92
The husband who killed her with a club! Shock to the girl!
The husband who killed her with a club! Shock to the girl!

தாலிக்கயிற்றின் மூலம் கொலை செய்த கணவன்! பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

31 வயதான அமல்ராஜ் என்ற நபர், கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லிப்பட்டியில் வாழ்ந்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, 28 வயதான ரஞ்சிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், இவர்களுக்கு 7 வயதான பவ்யா என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டியில் மூழ்கி இவர்களின் மகன் இறந்து விட்டான்.இ தனிடையே ரஞ்சிதாவுக்கும்தர்மபுரி மாவட்டம் அரூரில் கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதைப்பற்றி தெரிந்து கொண்ட கணவன், இதையறிந்த அமல்ராஜ், அவரது மனைவி ரஞ்சிதாவிடம் இந்த பழக்கத்தை கைவிடும்படி கண்டித்துள்ளார். ஆனாலும் ரஞ்சிதா தங்கராஜுடன் தொடர்ந்து பழகி வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரஞ்சிதா வீட்டில் இருந்து திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அமல்ராஜ் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் ரஞ்சிதா கிடைக்காததால் நேற்று முன்தினம் ரஞ்சிதா, கள்ளக்காதலன் தங்கராஜ் வீட்டில் இருப்பதாக அமல்ராஜுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அமல்ராஜ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரஞ்சிதாவை தனது வீட்டிற்கு அழைத்தார்.

பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டின் பின்புறம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கள்ளக்காதல் மற்றும் அவர்களுக்கு இருந்த கடன் பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அமல்ராஜ் தனது கையால் ரஞ்சிதாவின் கழுத்தை நெரித்து தாலி கயிற்றாலும் அவரது கழுத்தை இறுக்கினார். இதில் நிலைகுலைந்த ரஞ்சிதா மயங்கி விழுந்தார். இதையடுத்து தங்கராஜ் அங்கிருந்து சென்று விட்டு இரவில் வீட்டுக்கு வந்த அவர், மதுபோதையில் படுத்து தூங்கி விட்டார். நேற்று காலை அக்கம்பக்கத்தினர் அமல்ராஜை எழுப்பி, ரஞ்சிதா வீட்டின் பின்புறம் இறந்து கிடப்பதாக தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அமல்ராஜிடம் நடத்திய விசாரணையில், அவர் ரஞ்சிதாவை தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

ஆத்திரத்தில் ஏதோ தோணுவதை செய்து விடுகிறோம். ஆனால் இப்போது அவர்களது குழந்தையை யார் பார்த்து கொள்வார்கள். எனவே எது நடந்தாலும் கொஞ்சம் ஆற போட்டு பார்த்தால் பிரச்சனைகளும் குறைந்து இருக்கும். எனவே யோசிப்போம் இது செய்தாலும் இது தேவையா? என்று.