தஞ்சாவூர் மாவட்டத்தில் பேஸ்புக்கில் பழகி பள்ளி மாணவியை கடத்தி சென்ற சம்பவம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

0
79
The incident of abducting a schoolgirl after using Facebook in Thanjavur district! A lot of excitement in the area!
The incident of abducting a schoolgirl after using Facebook in Thanjavur district! A lot of excitement in the area!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேஸ்புக்கில் பழகி பள்ளி மாணவியை கடத்தி சென்ற சம்பவம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வடக்கு தெருவை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி சரளா. இவர்களின் மகள் பார்வதி (17). இவர்  ஒரத்தநாட்டில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.  இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தனது மகளை காணவில்லை என பார்வதியின் தாய் ஒரத்தநாட்டில் உள்ள  அனைத்து மகளிர் காவல் அளித்தார்.

இந்நிலையில் அந்த புகாரின் அடிப்படையில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் சுகந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இலையில் போலீசார் விசாரணையில் பார்வதி பேஸ்புக் மூலம் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கவுண்டம்பாளையம் கிராமத்தை வசித்து வருபவர் கோவிந்தசாமி. மகன் குருபிரசாந்த் (23). உடன் பேஸ்புக் மூலம் பழகி வந்ததாகவும் இந்நிலையில் சம்பத் அன்று மாணவி பார்வதியை பேஸ்புக் நண்பர் குரு பிரசாந்த் ஒரத்தநாட்டில் இருந்து அழைத்துச் சென்றதாகவும் தகவல் தெரிந்தது.

மேலும் விசாரித்த போது குரு பிரசாந்த் சொந்த ஊரில் உறவினரின் வீட்டில் தங்க வைத்துள்ளார் எனவும் தெரியவந்தது. இதை அறிந்த ஒரத்தநாட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் திருப்பூர் மாவட்டம் விரைந்து சென்று மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரை ஒரத்தநாடு அடைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மாணவியை பெற்றோருடன் ஒப்படைத்து பேஸ்புக் நம்பர் குருபிரசாந்தை போக்கு சட்டத்தின் கீழ் கைது செய்து ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். மேலும் பள்ளி மாணவி பேஸ்புக் மூலம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K