சிறைக்கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று!! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!!

0
150
#image_title

சிறைக்கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று!! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!!

இராமநாதபுரம் சிறைக்கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது போலீஸ் பாதுகாப்புடன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவலானது சற்று அதிகரித்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு இலக்க எண்களில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை ராமநாதபுரம் சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி தற்போது அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இரு நபர்களுக்கு சளி காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்ததாக தெரிகிறது உடனடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்த நிலையில் போலீசார் அவர்களை சிகிச்சைக்காக இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கைதிகளுக்கு தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரண்டு கைதிகளுடன் மேலும் இரண்டு பேர் என மொத்தமாக நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

author avatar
Savitha