புதுச்சேரியில் பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ. 4 லட்சம் பணம் திருட்டு!!

0
155
#image_title

புதுச்சேரியில் பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ. 4 லட்சம் பணம் திருட்டில் ஈடுப்பட்ட பணி பெண் உட்பட அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்றவர் லட்சுமி (51). இவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது பள்ளி படிக்கும் மூன்று குழந்தைகள் மற்றும் தனது உறவினருடன் (அத்தையுடன்) லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இதனிடையே அவ்வப்போது பிரான்ஸ் நாட்டுக்கு சென்று வரும் லட்சுமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரிக்கு வந்த போது தனது வீட்டு வேலைக்காக முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி உஷா (37) என்பவரை வேலைக்கு சேர்த்துக் கொண்டார்.

இதற்கிடையே லட்சுமி கடந்த அக்டோபர் மாதம் பிரான்சிற்கு சென்று விட்டு மீண்டும் டிசம்பர் மாத இறுதியில் புதுச்சேரிக்கு வந்தார். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வீட்டின் அலமாரியில் உள்ள நகைகளை அணிந்து செல்ல முற்பட்ட போது அலமறியில் இருந்த தங்க சங்கிலி, நெக்லஸ், வளையல், மோதிரம் உள்ளிட்ட 20 பவுன் நகைகள், ரூ 60,000 ஆயிரம் ரொக்கம், பிரான்ஸ் நாட்டு பணம் 4000 யூரோ (இந்திய மதிப்பு ரூ. 360000) ரொக்கம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்.

இது தொடர்பாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வீட்டு பணி பெண் உஷா நடவடிக்கைகள் மீது சந்தேகம் அடைந்த போலீசார்.

அவரை கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி காவலில் எடுத்து விசாரணையை தொடங்கியதில் லட்சுமி வீட்டில் பீரோ சாவி இருந்த இடத்தை அறிந்து கொண்ட உஷா கடந்த செப்டம்பர் மாதம் முதலே சிறிது சிறிதாக நகை மற்றும் பணத்தை திருடி, தனது கணவர் சுரேஷிடம் கொடுத்தாகவும்.

அதனை அவர் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விற்று அந்த பணத்தில் புதிய நகைகள் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து சுரேஷை கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து சில நகைகளை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

author avatar
Savitha