ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

0
88
The incident that took place in Erode district! The people of the area are deeply saddened!
The incident that took place in Erode district! The people of the area are deeply saddened!

ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள கருமாண்டி பள்ளிபாளையம் பேரூராட்சி பாரதி நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (34). இவர் காரை வாடகைக்கு இயக்கி வருகிறார். இவருடைய மனைவி மருதவள்ளி(28). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாலச்சந்தர் குடிப்பழகத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.

இந்நிலையில் ஒரு தகராறு காரணமாக மருதவள்ளி  கோபித்துக் கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனால் மனமுடைந்த நிலையில் பாலச்சந்திரன் காணப்பட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பாலச்சந்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலச்சந்தர் காலை வெகு நேரமாகியும் வீட்டிலிருந்து வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

மேலும் அப்போது பாலச்சந்தர் தூக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து  அக்கம் பக்கத்தினர் பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் பெருந்துறை போலீசார் விரைந்து வந்து பாலச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டுச் சென்ற இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K