வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் காதலனை அழைத்து காதலி செய்த சம்பவம்!!

0
73
The incident where the girlfriend called her boyfriend when no one was at home !!
The incident where the girlfriend called her boyfriend when no one was at home !!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் காதலனை அழைத்து காதலி செய்த சம்பவம்!!

பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் பெண்களுக்கு தான் பெரும்பாலும் நடைப்பெற்று கொண்டிருந்தது. இது போன்ற சம்பவங்களுக்கு ஆண்களும் விதிவிலக்கு அல்ல என்பது இந்த சம்பவத்தின் மூலம் நிரூபணம் ஆனது.

காதலுக்கு பேர்போன தாஜ்மஹால் உள்ள அக்ரா நகரத்தை சேர்ந்தவர்கள் சோனம் மற்றும் தேவேந்திரா. இவர்கள் இருவரும் தனியார் மருத்துவ மனையில் பணிபுரிந்து வருகின்றனர். சோனம் அம்மருத்துவமனையில் சேவிலியரகவும் தேவேந்திரா அதே மருத்துவ மனையில் ஆய்வக உதவியாளரகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு நீண்ட காலம் ஒன்றாக ஊர் சுற்றி உள்ளனர்.

தீடிரென்று தேவேந்திராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சியம் ஆகியுள்ளது. இதனால் கோபமடைந்த சோனம் அவரை ஏமாற்றியதற்கு பழி வாங்க திட்டம் தீட்டயுள்ளார். அந்த திட்டத்தை அமல்ப்படுத்த தனது வீட்டில் மின்விசிறி பழுதாகி விட்டதாகவும் அதை தேவேந்திரா தான் வந்து சரி செய்து தர வேண்டும் எனவும் தொலைபேசி மூலம் தேவேந்திராவை வீட்டுக்கு வர வைத்தார் சோனம். பாவம் தனது காதலியை நம்பி வந்த தேவேந்திராவுக்கு தெரியாது அதுதான் தனது கடைசி நாள் என்றும் தனது காதலிதான் தனக்கு எமன் ஆக போகிறார் என்று.

காதலியின் அழைப்பை ஏற்று அவருக்கு உதவி செய்ய வீட்டுக்குள் சென்ற தேவேந்திரா, மின்விசிறியை பழுது பார்த்து கொண்டிருந்த போது சோனம் மறைத்து வைத்திருந்த அசிட் -ஐ  எடுத்து தேவேந்திரா மீது ஏறிந்தார். துடித்து அலறிய தேவேந்திரா அங்கேயே சுருண்டு விழுந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்ப்பக்கத்தினர் தேவேந்திராவை மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். தேவேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆசிட் எரியும் போது சோனம் கைகளிலும் திரவம்  பட்டு சில காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர் அவரை கைது செய்து மருவமையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவரை இதுவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடதகாது

author avatar
CineDesk