சளி,ஆஸ்துமா,தொண்டை கட்டல்,தொண்டை எரிச்சல்,இருமல்,சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக ஆடாதோடை இலையை மருந்தாக சாப்பிடலாம்.ஆடாதோடை இலையை வைத்து மருந்து தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
ஆடாதோடை இலை
வெந்நீர்
தேன்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கைப்பிடி ஆடாதோடை இலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதனை நிழல்பாங்கான இடத்தில் பரப்பிவிட்டு காய வைக்க வேண்டும்.
ஆடாதோடை இலை நன்றாக காய்ந்து வந்த பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.இந்த நீரில் ஒரு தேக்கரண்டி ஆடாதோடை இலை பொடி போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தேக்கரண்டி அளவு தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்து பெருகினால் சளி,ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஆடாதோடை இலை
2)தேன்
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு அல்லது மூன்று ஆடாதோடை இலையை இட்லி பாத்திரத்தில் போட்டு ஆவியில் வேக வைக்க வேண்டும்.
பின்னர் ஆடாதோடை இலையின் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் ஊற்றி கலக்கி பருக வேண்டும்.தொடர்ந்து மூன்றுவேளை பருகினால் சளி,ஆஸ்துமா,தொண்டை கட்டல்,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.
ஆடாதோடை இலையை பொடித்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு கிளாஸ் வெந்நீரில் சிறிதளவு கலந்து குடித்து வந்தால் சுவாசம் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.